மாலைதீவு நீரில் மூழ்கும் ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் காலநிலை மாற்றத்தை தாக்கத்திற்கு எதிராக போரிடுவதற்கான நிதியை வழங்குமாறு உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தினை எதிர்த்து போராடுவது சிறிய நாடுகளிற்கு இலகுவான விடயமல்ல என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சகீட் எங்களிற்கு அவசியமாகவுள்ள நிதி எங்களை வந்தடையும் போது நாங்கள் நீரில் மூழ்கியிருப்போம் என தெரிவித்துள்ளார்.
மட்ரிட்டில் டிசம்பர் மாதம் இடம்பெற்ற காலநிலை தொடர்பான ஐநா மாநாட்டில் மாலைதீவும் ஏனைய சிறிய நாடுகளும் இயற்கை அனர்த்தம் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக தங்களிற்கு புதிய நிதியுதவி அவசியம் என வேண்டுகோள் விடுத்திருந்தன.
எனினும் இந்த நாடுகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை
எனினும் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் சிறந்த முடிவுகள் கிடைக்கலாம் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாலைதீவின் 80 வீதமான நிலப்பரப்பு கடல்மட்டத்தை விட ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மாலைதீவு மக்கள் புயல் , கடல் மட்;டம் அதிகரிப்பு மோசமான காலநிலை போன்ற அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.
2004 இல் ஏற்பட்ட சுனாமி உட்கட்டமைப்பு வசதிகளிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.சுனாமி காரணமாக மாலைதீவின் விமானநிலையம் பல நாட்களாக மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாலைதீவின் இரு முக்கிய தொழில்துறைகளான மீன்பிடித்துறையும் சுற்றுலாத்துறையும் கரையோர வளங்களை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன.மேலும் பெருமளவு குடியேற்றங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் கரையோரப்பகுதிகளிலேயே காணப்படுகின்றது.
மாலைதீவின் நூற்றிற்கும் மேற்பட்ட தீவுகள் ஏற்கனவே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மாலைதீவு தனது கரையோரப்பகுதிகளை பாதுகாப்பதற்கு வருடந்தோறும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவுசெய்கின்றது,எனினும் மக்கள் வசிக்கும் அதன் தீவுகளை பாதுகாப்பதற்கு மாலைதீவிற்கு மேலதிகமாக 8 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது.
தீவுகளை பாதுகாப்பதற்கு நாங்கள் கடல் சுவர்களை அமைக்கவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இது செலவு மிகுந்த திட்டம் ஆனால் எங்களிற்கு இது அவசியம் என தெரிவிக்கின்றார்.
நாங்கள் அனைவரும் கடலிற்குள் இழுத்துச்செல்லப்படும் வரைகாத்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM