யாழ்.மாநகரசபைக்குட்பட்ட கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது !

Published By: Daya

17 Jan, 2020 | 11:51 AM
image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கால்வாய்கள் புனரமைக்கப்படாமையினால் கால்வாயில் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் இடமாகவும் மற்றும் நுளம்பு பெருகும் இடமாகவும் மாறிவருகின்றது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட யாழ்.நகரப்பகுதிகளை அண்டிய மக்கள் கூடும் இடங்களை அண்மித்த இடங்களிலுள்ள கால்வாய்களே இத்தகைய துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.பேதனாவைத்தியசாலையை அண்டியுள்ள கால்வாய் மற்றும் யாழ்.புகையிரத நிலையப் பகுதியை அண்மித்திருக்கும் கால்வாயிலுள்ள நீர் வடிந்தோடாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த பகுதியிலுள்ள வட்டார உறுப்பினர்களிடம் அறிவித்திருந்தபோதும் அதனை அவர்கள் கவனிக்காதுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீடுகள் மற்றும் வளவுகளில் நீர் தேங்கிநின்றால் டெங்கு நுளம்புகள் விருத்தியடைகின்றன என சட்ட நடவடிக்கை எடுக்கும் மாநகரசபை பொது இடங்களில் நீர் தேங்கியுள்ளமை தொடர்பில் எத்தகைய அவதானிப்புக்களும் இன்றி செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாழ்.நகரத்தை பொறுத்தவரையில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமன்றி யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்லும் இடமாகவுள்ளமையினால் குறித்த பகுதிகளை துப்புரவு செய்யவும் அதனை நிரந்தரப் புனரமைப்பு செய்யவேண்டும் எனவும் மக்கள் கேரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17