வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை; சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிப்பு

Published By: Daya

17 Jan, 2020 | 09:26 AM
image

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் செலுத்திய 36 சாரதிகளிற்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள விபத்துக்களைக் கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ்குழுவினர் வாரத்திற்கு ஒருநாள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்றையதினம் வவுனியா ஏ 9 வீதியில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அபாயமான முறையில் வாகனம் செலுத்தியமை , வாகனம் செலுத்தும் போது தொலைப்பேசி பயன்படுத்தியமை, போதையில் வாகனம் செலுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 36 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அவற்றில் 6 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்குத் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைப் பாதசாரிகள் மற்றும் வாகனசாரதிகளிற்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக தெளிவூட்டல்களையும் பொலிஸார் வழங்கியிருந்தனர்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுமெனவும் விபத்துக்களைக் குறைக்கவும், சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளைப் பின்பற்றிச் சிறப்பான பயணத்தை மேற்கொள்ளவுமே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49