ஆபத்தில் தமிழர்களை கைவிட்ட சர்வதேசம் ஒருபோதும் அரசியல் தீர்வை பெற்றுத்தராது: அமைச்சர் டக்ளஸ்

Published By: J.G.Stephan

16 Jan, 2020 | 09:10 PM
image

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்குள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளால் எமக்கான தீர்வுகளை பெற்றுத் தரமுடியாது எனத் தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , யுத்தத்தின் போது எம்மை கைவிட்டுச் சென்ற சர்வதேச சமூகம் ஒருபோதும் எமக்கான தீர்வுகளைப் பெற்றுத் தராது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

யுத்தம் நடைபெற்ற போது எம்மை கைவிட்டுச் சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று கோரிய போதிலும் அதனைக் கவனத்தில் கொள்ளாத சர்வதேசம்,  மக்களுக்கு தீர்வுகளை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தில் தீர்வு இருப்பதாக போலித் தமிழ் தேசியம் பேசுபவர்கள் சுயநலவாதிகளாவர். தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாமே நடைமுறைச் சாத்தியமான வழியில் முயற்சிக்க வேண்டும்.

இன ஐக்கியம், தேசிய நல்லிணக்த்தின் ஊடாகவே தேசிய அரசியல் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண வேண்டும். அவ்வாறில்லாமல் சர்வதேச சமூகத்திடம் தீர்வு இருப்பதாகவும் கூறி தொடர்ந்தும் தமிழ் மக்களை தவறான பாதையில் இழுத்துச் சென்று மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடுவதற்கும் - இருக்கின்ற பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்குமே சுயநல அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32