தாமரையைக் காண்பித்து பௌத்தர்களையும் தேரர்களையும் அரசாங்கம் ஏமாற்றி விட்டது - ஐ.தே.க

Published By: T. Saranya

16 Jan, 2020 | 05:26 PM
image

(நா.தனுஜா)

புதிய அரசாங்கம் தேர்தலின் போது தாமரையைக் காண்பித்து பௌத்த தேரர்களையும், சிங்கள பௌத்த மக்களையும் ஏமாற்றிவிட்டது. அவர்கள் பல்வேறு கனவுகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவையனைத்தும் வெறும் கனவாகவே போய்விட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டு மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளையளித்து ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கம், அவற்றில் எதனையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. எமது நல்லாட்சி அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

எனினும் மக்கள் அவற்றைப் புறந்தள்ளியதோடு மாத்திரமல்லாமல், நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் ராஜபக்ஷ அரசாங்கம் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பிலேயே தற்போதைய அரசைத் தெரிவுசெய்தார்கள். ஆனால் இறுதியில் சகோதரர்களுக்கு அதிகார நாற்காலியை வழங்கியதோடு மாத்திரமன்றி, அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அரசசேவையில் உயர்பதவிகளை வழங்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே தற்போதைய அரசாங்கம் தேர்தலின் போது தாமரையைக் காண்பித்து பௌத்த தேரர்களையும், சிங்கள பௌத்த மக்களையும் ஏமாற்றிவிட்டது. அவர்கள் பல்வேறு கனவுகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவையனைத்தும் வெறும் கனவாகவே போய்விட்டது என்பதை மாத்திரமே எம்மால் கூறமுடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56