ரயில் விபத்து : வேனில் பயணித்த சகோதரனும் சகோதரியும் பலி !

Published By: Priyatharshan

15 Jan, 2020 | 07:20 PM
image

(எம்.மனோசித்ரா)

குருணாகல் - நயிலிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு பயணித்த  புகையிரதத்துடன் வேன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

புகையிரத கடவையில் கவனக்குறைவாக வேனை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பிரபாத் தென்னகோன் என்ற சகோதரனும் 27 வயதுடைய அனுஷ்கா சமன் குமாரி என்ற அவரது சகோதரியுமாவர். 

இவர்கள் மாவத்தகம , தஹபத்வல - ரத்மல் கஹபிடியவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். 

விபத்தில் வேன் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு நயிலிய புகையிரத நிலையத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56