(எம்.மனோசித்ரா)
குருணாகல் - நயிலிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு பயணித்த புகையிரதத்துடன் வேன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
புகையிரத கடவையில் கவனக்குறைவாக வேனை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பிரபாத் தென்னகோன் என்ற சகோதரனும் 27 வயதுடைய அனுஷ்கா சமன் குமாரி என்ற அவரது சகோதரியுமாவர்.
இவர்கள் மாவத்தகம , தஹபத்வல - ரத்மல் கஹபிடியவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
விபத்தில் வேன் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு நயிலிய புகையிரத நிலையத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM