(இராஜதுரை ஹஷான்)
பல்லின மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மக்களின் மத கலாசாரங்களுக்கும் பாரபட்சமின்றிய விதத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 2020ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் நிகழ்வை அரசாங்கம் உரிய காரணங்கள் இன்றி இரத்து செய்தது கவலைக்குரியது. பிற மதங்களின் தனித்துவத்துக்கும் அரசாங்கம் முன்னுரிமை கொடுத்தால் மாத்திரமே தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மூன்று இனத்தவர்களையும் ஒன்றிணைத்து கடந்த ஐந்து வருட காலமாக கொண்டாடிய தேசிய தைப்பொங்கல் தின நிகழ்வுகள் இம்முறை இரத்து செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடாகவே கருத முடியும். கொண்டாட்டங்களின் ஊடாகவே தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும். ஓர் இனத்தின் மத கலாசாரங்களை பிறிதொரு இனத்தவர் புரிந்துகொள்வது அவசியமா கும்.
கடந்த ஐந்து வருட காலமாக 25 மாவட்டங்களையும் ஒன்றிணைத்த வகையில் நத்தார், தைப்பொங்கல், ரமழான் ஆகிய பண்டிகைகள் தேசிய விழாவாக இளைஞர், யுவதிகளினால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டன. நாளை கொண்டாடவுள்ள தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நுவரெலியா மாவட்டத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் எவ்வித உரிய காரணங்களுமின்றிய விதத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியது. ஓர் இனத்துக்கும், கலாசாரங்களுக்கும் மாத்திரம் முன்னுரிமை அரச ரீதியில் வழங்கப்படும் பட்சத்தில் அங்கு முரண்பாடுகளே தோற்றம் பெறும். இதற்கு வரலாற்றுச் சம்பவங்கள் சான்று பகர்கின்றன. இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து மக்களின் தனித்துவத்துக்கும் முன்னுரிமை கொடுத்தால் மாத்திரமே அங்கு ஜனநாயகம் நடைமுறையில் செயற்படுத்தப்படும். இன்று இந்நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து இன மக்களின் தனித்துவங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதை இன்று ஆளும் தரப்பினர் அரசியலமைப்பிற்கு முரணான செயல் என்று குறிப்பிடுகின்றார்கள். ஒரு மொழியை அரசியல் தேவைகளுக்காக புறக்கணிப்பதால் எவ்வித நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களும் தோற்றம் பெறாது. அவை எதிர்காலத்திலே மாறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே அரசாங்கம் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே செயற்பட வேண்டும். தமிழ், - முஸ்லிம் மக்களின் தனித்துவங்களுக்கு மதிப்பளித்து தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM