bestweb

பிள்ளையை பாடசாலைக்கு விட்டு வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மனைவி

Published By: Digital Desk 8

13 Jan, 2020 | 04:51 PM
image

(ஆர்.விதுஷா)

பதுளை  - அசேலபுர  பகுதியில்  பெண்ணொருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.  

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை  6.30  மணியளவில் இடம்பெற்றதாக  பதுளை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி   தெரிவித்தார்.  

வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண் பதுளை  வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் பிள்ளையை  பாடசாலைக்கு அழைத்து  சென்றிருந்த  தருணத்தில் அங்கு வந்த  நபரொருவரே குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக விசாரணைகளின் போது  தெரிய  வந்துள்ளது.

பாடசாலை  சென்று காலை 8 மணியளவில் வீடு  திரும்பிய போது  தமது மனைவி  கை, கால்கள்  கட்டப்பட்டு,  கழுத்தில்  வெட்டுக்காயங்களுடன்  இருப்பதை பார்த்த  கணவர் உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.  

வீட்டு கட்டுமான  பணிக்காக  வருகை தந்திருந்த  பதுளை , பதுலுசிறிகமை பகுதியை  சேர்ந்த  நபரொருவரே  இந்த செயலை புரிந்துள்ளமை விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ளது.  

சம்பவத்துடன்  தொடர்புடைய  சந்தேகநபர்  இதுவரையில்  கைதுசெய்யப்படாத நிலையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன்,  சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பதுளை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56