பிள்ளையை பாடசாலைக்கு விட்டு வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மனைவி

Published By: J.G.Stephan

13 Jan, 2020 | 04:51 PM
image

(ஆர்.விதுஷா)

பதுளை  - அசேலபுர  பகுதியில்  பெண்ணொருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.  

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை  6.30  மணியளவில் இடம்பெற்றதாக  பதுளை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி   தெரிவித்தார்.  

வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண் பதுளை  வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் பிள்ளையை  பாடசாலைக்கு அழைத்து  சென்றிருந்த  தருணத்தில் அங்கு வந்த  நபரொருவரே குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக விசாரணைகளின் போது  தெரிய  வந்துள்ளது.

பாடசாலை  சென்று காலை 8 மணியளவில் வீடு  திரும்பிய போது  தமது மனைவி  கை, கால்கள்  கட்டப்பட்டு,  கழுத்தில்  வெட்டுக்காயங்களுடன்  இருப்பதை பார்த்த  கணவர் உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.  

வீட்டு கட்டுமான  பணிக்காக  வருகை தந்திருந்த  பதுளை , பதுலுசிறிகமை பகுதியை  சேர்ந்த  நபரொருவரே  இந்த செயலை புரிந்துள்ளமை விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ளது.  

சம்பவத்துடன்  தொடர்புடைய  சந்தேகநபர்  இதுவரையில்  கைதுசெய்யப்படாத நிலையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன்,  சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பதுளை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46