பிள்ளையை பாடசாலைக்கு விட்டு வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மனைவி

Published By: Digital Desk 8

13 Jan, 2020 | 04:51 PM
image

(ஆர்.விதுஷா)

பதுளை  - அசேலபுர  பகுதியில்  பெண்ணொருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.  

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை  6.30  மணியளவில் இடம்பெற்றதாக  பதுளை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி   தெரிவித்தார்.  

வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண் பதுளை  வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் பிள்ளையை  பாடசாலைக்கு அழைத்து  சென்றிருந்த  தருணத்தில் அங்கு வந்த  நபரொருவரே குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக விசாரணைகளின் போது  தெரிய  வந்துள்ளது.

பாடசாலை  சென்று காலை 8 மணியளவில் வீடு  திரும்பிய போது  தமது மனைவி  கை, கால்கள்  கட்டப்பட்டு,  கழுத்தில்  வெட்டுக்காயங்களுடன்  இருப்பதை பார்த்த  கணவர் உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.  

வீட்டு கட்டுமான  பணிக்காக  வருகை தந்திருந்த  பதுளை , பதுலுசிறிகமை பகுதியை  சேர்ந்த  நபரொருவரே  இந்த செயலை புரிந்துள்ளமை விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ளது.  

சம்பவத்துடன்  தொடர்புடைய  சந்தேகநபர்  இதுவரையில்  கைதுசெய்யப்படாத நிலையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன்,  சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பதுளை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்...

2026-07-18 17:00:56
news-image

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும்...

2026-07-18 16:38:27
news-image

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25ஆவது...

2026-07-18 15:53:31
news-image

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : கடந்த...

2026-07-18 15:27:10
news-image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின்...

2026-07-18 15:20:54
news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15
news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33