(எம்.மனோசித்ரா)
பிளவுப்பட்டு தனித்து செயற்படுவதால் எதனையும் சாதித்து விட முடியாது. மேலும் பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும். ஆகவே எதிரே காணப்பட கூடிய சவால்களை கவனத்தில் கொண்டு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய பிக்கு முன்னணியின் பொதுச் செயலாளர் நீனியாவல பாலித தேரர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆகியோர் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும். இதனூடாகவே சிறுபான்மை , நடுத்தர வர்க்க , பௌத்த மற்றும் கிராமிய மக்களின் அதரவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் மற்றுமொரு தேசிய தேர்தலை எதிர்கொள்கின்ற போது யாரையும் அநாவசியமானவர்கள் எனக் கருத கூடாது. இது வெற்றியை பாதிப்பது மாத்திரமன்றி அவ்வாறு ஓரங்கட்டுவதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.
அவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய யோசனையினை மூவருக்கும் எழுத்து மூலமாகவும் இன்று செவ்வாய்க்கிழமை வழங்க உள்ளோம்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக கிடைக்க கூடிய ஆசனங்களை கவனத்தில் கொண்டு தலைவர்கள் செயற்பட வேண்டும்.
தனித்து செயற்படுவதால் எதனையும் சாதித்து விட முடியாது. மேலும் பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும் என நீனியாவல பாலித தேரர் மேலும் குறிப்பிட்டார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM