அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். அதன்பின் கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸிலிருந்து விலகியிருந்தார்.
குழந்தை பெற்றபின் தீவிர பயிற்சி மேற்கொண்டு மீண்டும் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தினார். முக்கியமான சில தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆனால் அவரால் கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ஆக்லாந்து கிளாசிக் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அப்போட்டியில் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். இதில் 6-3– 6-4 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் 2017-க்குப்பின் முதன்முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் ஊடாக அவருக்கு கிடைத்த பரிசுத் தொகையை அவுஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM