(இராஜதுரை ஹஷான்)
சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் சபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் குடும்ப உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ குடும்ப உறுப்பினர்களை ஒருபோதும் உயர்பதவிகளுக்கு நியமிக்கமாட்டேன் என்று குறிப்பிட்டார். அரசாங்கத்தின் உண்மைத்தன்மை வெளிப்பட ஆரம்பித்து விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பல நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தது. தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அரச ஊழியர்களுக்கு சாதகமான நிைலமை தோற்றம் பெறும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று அரச ஊழியர்களே பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கடந்த அரசாங்கம் சீன நிறுவனத்திற்கு தாரை வார்த்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 மாத காலத்துக்குள் எவ்வித விலைமனுகோரலுமின்றி கொழும்பு சங்ரில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள 3 ஏக்கர் அரச காணி சிங்கப்பூர் நிறுவனத்துக்கு 99வருட கால ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் நாட்டு மக்களின் கவனத்தில் இருந்து முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையக மறைக்கவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவுகள் பரவலாக அரசியல் களத்தில் பேசப்படுகின்றன. இவ்விடயத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.
அரச அதிகாரத்தை பிரயோகித்து குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ குறிப்பிட்டார். ஆனால் இரகசியமான முறையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் உறவினர் மற்றும் ரோஹித்தவின் உறவினர் ஆகியோர் சிவில் விமான சேவைகள் சபையின் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான அரசாங்கத்தின் சுய ரூபம் தற்போது தோற்றம் பெற ஆரம்பித்து விட்டது.
தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இனி மேற்கொள்ளாது. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களும் இனி இல்லாதொழிக்கப்படும். இன நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது அக்கிராசன உரையில் குறிப்பிடவில்லை என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM