ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைப்பதறற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) திட்டத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா-உல்-ஹக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளதாவது:-
டெஸ்ட் போட்டியில் தற்போது வேகப்பந்து வீரர்கள் ஒரு இன்னிங்ஸூக்கு சுழற்சி முறையில் 17 முதல் 18 ஓவர்கள் வரை வீசுகிறார்கள். 4 நாட்களாக குறைக்கும்போது 20 முதல் 25 ஓவர்கள் வரை வீச வேண்டிய நிலைவரும். கூடுதலான ஓவர்களை வீசுவதால் பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஸ்டார்க், கம்மின்ஸ், நசீம் ஷா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப்பந்து வீரர்கள் அதிகமான ஓவர்களை வீச வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அவர்களது வேகப்பந்து வீச்சுத்திறன் பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 நாள் டெஸ்ட் போட்டிக்கு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகள் வரவேற்பு தெரிவித்த அதேவேளை இதை கவனமுடன் கையாளுமாறும் வேண்டுகோள் விடுத்தன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுத் தலைவர் கங்குலி இது குறித்து எந்த முடிவும் தெரிவிக்கவில்லை.
இருந்த போதும் கிரிக்கெட்டின் சகாப்தம் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பொண்டிங், ஸ்டீவ் வாக், அவுஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நதன் லயன், பயிற்சியாளர் லாங்கர் உள்ளிட்ட பலர் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் ஐ.சி.சி. யின் திட்டத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM