(செ.தேன்மொழி)
பௌர்ணமி தினத்தன்று புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமை தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நாட்டின் சிறந்த தலைவர் ஒருவர் இவ்வாறு தான் செயற்பட வேண்டும் என்றும் கூறி னார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது கோத்தபாய தாம் ஆட்சிக்கு வந்தால் சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அனைவரையும் விடுதலை செய்வதாகத் தெரிவித்திருந்தார். இதனால் பலரும் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள புலனாய்வு பிரிவினருக்கு பிணை வழங்குவது தொடர்பில் சிறிது காலதாமதம் ஏற்பட்டதினால் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவவரும் கவலையடைந்திருந்தனர்.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்கவுக்காவது பிணை வழங்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதற்கமைய கடந்த பௌர்ணமி தினம் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட 34 புலனாய்வு பிரிவினருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் , எந்தவித பரிந்துரையும் இன்றி அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சொல்வதை செய்யும் தலைவர் என்றால் இவ்வாறுதான் செயற்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட்டதற்காக ஜனாதிபதிக்கும் , நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் நாங்கள் நன்றித் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM