34 புல­னாய்வு அதி­கா­ரி­களை விடு­வித்­த­மைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் அஜித் பி. பெரேரா

13 Jan, 2020 | 01:26 PM
image

(செ.தேன்­மொழி)

பௌர்­ணமி தினத்­தன்று புல­னாய்வு அதி­கா­ரிகள் சில­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­தமை தொடர்பில் ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­ப­க் ஷ­வுக்கு நன்றி தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பி பெரேரா நாட்டின் சிறந்த தலைவர் ஒருவர் இவ்­வாறு தான் செயற்­பட வேண்டும் என்றும் கூறி னார்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்­தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­கச் ­சந்­திப்பில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­களின் போது கோத்தபாய தாம் ஆட்சிக்கு வந்தால் சிறை­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரிகள் அனை­வ­ரையும் விடு­தலை செய்­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இதனால் பலரும் அவ­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இவ்­வாறு சிறை­வைக்­கப்­பட்­டுள்ள புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு பிணை வழங்­கு­வது தொடர்பில் சிறிது கால­தா­மதம் ஏற்­பட்­ட­தினால் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த மற்றும் வாக்­க­ளிக்­காத அனை­வ­வரும் கவ­லை­ய­டைந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த சார்ஜென்ட் சுனில் ரத்­நா­யக்­க­வுக்­கா­வது பிணை வழங்­கப்­பட வேண்டும் என்று பலரும் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். இதற்­க­மைய கடந்த பௌர்­ணமி தினம் சுனில் ரத்­நா­யக்க உள்­ளிட்ட 34 புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு ஜனா­தி­ப­தியின்  பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் , எந்­த­வித பரிந்­து­ரையும் இன்றி அர­சாங்கம் விடு­தலை செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

சொல்­வதை செய்யும் தலைவர் என்றால் இவ்­வா­றுதான் செயற்­பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட்டதற்காக ஜனாதிபதிக்கும் , நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் நாங்கள் நன்றித் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18