ரணில் -சஜித் - கரு தலை­வ­ரா­வது யார் ? முடி­வில்­லையேல் இர­க­சிய வாக்­கெ­டுப்பாம் !

13 Jan, 2020 | 12:47 PM
image

(ஆர்.யசி)

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­துவம் குறித்து கட்­சிக்குள் பல­வித மாறு­பட்ட கருத்­துக்கள் நில­வு­கின்ற நிலையில் கட்­சியின் தலை­மைத்­துவ மாற்றம் குறித்து எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை இறுதித் தீர்­மானம் ஒன்­றினை எட்ட முயற்­சிப்­ப­தாகவும்  தீர்­மானம் எட்­டப்­ப­டா­விட்டால் இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் எனவும் ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஸ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­துவ தீர்­மா­னங்கள் குறித்து வின­விய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் தலை­மைத்­துவ மாற்றம் குறித்து கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை கட்­சியின் தலை­வ­ராக்க வேண்டும் எனவும் பிர­தமர் வேட்­பா­ள­ராக அவ­ரையே கள­மி­றக்க வேண்டும் எனவும் கட்­சிக்குள் ஒரு சாரார் கூறி வரு­கின்­றனர். எனினும் மல்­வத்து அஸ்­கி­ரிய பீடங்கள் மற்றும் அம­ர­புர நிகா­ய­வினர் கரு ஜெய­சூ­ரி­யவை தலை­வ­ராக்க வேண்டும், பெளத்த சிங்­கள வாக்­கு­களை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யுள்­ளனர்.  

எனவே எதிர்­வரும்  16 ஆம் திகதி மீண்டும் கட்­சிக்குள் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும், அதில் இறுதி தீர்­மானம் ஒன்­றினை எடுக்க வேண்டும் என்றே அனை­வரும் கூறு­கின்­றனர். ஆகவே  16 ஆம் திகதி இறுதித் தீர்­மானம் எட்­டப்­படும் என நாமும் எதிர்­பார்க்­கின்றோம். அவ்­வாறு முடி­யாமல் போனால் இர­க­சிய வாக்­கெ­டுப்பு ஒன்­றினை நடத்தி தலை­மைத்­துவம் குறித்து தீர்­மானம் ஒன்­றினை எட்ட முடியும். தற்­போ­தைய தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாச ஆகிய மூவரில் யார் தலைவர் என்­பதை இர­க­சிய வாக்­கெ­டுப்பு மூல­மா­கவும் தீர்­மா­னிக்க முடியும்.

அது­மட்டும் அல்ல கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் தோல்­வியை சந்­திக்க  கட்­சிக்குள் சிலரும் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன போன்றவர்களுமே காரணமாகும். ஆகவே இனியும் கட்சியை நாம் பலவீனப்படுத்த தயாராக இல்லை. கட்சிக்குள் உள்ள முரண்பாடுகளை விரைவில் தீர்த்து தேர்தலுக்கு முகங்கொடுப்போம்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18