இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 24ஆம் திகதி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன் 20 ஓவர் கொண்ட ஐந்து போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான 15 வீரர்கள் பட்டியலுக்கு பதிலாக 16 அல்லது 17 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
20 ஓவர் அணியைப் பொறுத்தவரை உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திரசிகிச்சை செய்துகொண்ட சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா கடந்த 4 மாதங்களாக எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் நியூஸிலாந்து தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே இந்திய ஏ அணிக்கு தேர்வாகியிருந்த ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதி சோதனை நேற்று முன்தினம் நடந்தது. அதில் அவர் முழு உடல்தகுதி பெறவில்லையென தெரிவிக்கப்பட்டதால் இந்திய ஏ அணியிலிருந்து விலக்கப்பட்டார்.
எனவே அவரது வருகை மீண்டும் தாமதமாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் ஒதுங்கி இருக்கும் டோனி இந்தத் தொடரிலும் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பார்மில் இல்லாத 34 வயதான சகலதுறை ஆட்டக்காரர் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ரஹானே ஆகியோரின் பெயர் ஒருநாள் போட்டி அணிக்கு பரிசீலிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டெஸ்ட் அணியை பொறுத்தவரை 3ஆவது தொடக்க ஆட்டக்காரர் இடம் மட்டுமே காலியாக உள்ளது. பிரித்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் லோகேஷ் ராகுல், சுப்மான் கில் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். 5 ஆவது வேகப்பந்து வீச்சாளர் நப்தீப் சைனிக்கு பதில் 3ஆவது சுழற்பந்து வீச்சாளர் தேவை என்று தேர்வாளர்கள் கருதினால், குல்தீப் யாதவ் இடம்பிடிப்பார். மற்றப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோர் வழக்கம் போல் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM