பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இன்று (13.01.2020) காலை தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்திரம் இராஜசீலன் (வயது 32) என்ற குடும்பஸ்தர் இன்று காலை 7.00 மணியளவில் கொடிகாமம் பகுதியில் ரயிலின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
பருத்தித்துறையில் நேற்று முன்தினம் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் தேடியிருக்கின்றனர்.
இந்நிலையில் காலை ரயில் முன்பாக பாய்ந்த அவர் தற்கொலை செய்திருக்கின்றார். அவர் ரயிலில் மோதுவதற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM