சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருட மே மாதத்தில் 113,529 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்த நிலையில், இவ்வருடம் 10 சதவீதம் அதிகரித்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125044 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 5 மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 846,222 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 714,584 ஆக காணப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 5 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18.2 சதவீத வளர்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15.7 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும் மேற்கு ஐரோப்பா பகுதியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகமாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்து வருகைத்தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM