(எம்.மனோசித்ரா)
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவை வெற்றி பெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான அர்ப்பணிப்புடன் உதவியிருந்தது.
கோத்தாபய ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று எண்ணி நாம் கட்சி ரீதியாக அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தோம். குறிப்பாக நாட்டுக்கு புதிய பாதையில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பது உணரப்பட்டது.
சுமார் ஒன்றரை மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடனும் மேலும் பல கட்சிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் புதிய ஜனாதிபதிக்கு அதிக பலத்தை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது அவசியமாகும். அவ்வாறு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றுக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு முழுமையாக ஆதரவை வழங்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM