பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குரல் பதிவுகளையும் இணையத்தில் வெளியிடுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிடுகையில்,
வெளியாகியுள்ள குரல் பதிவுகளில் பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதை மக்கள் தற்போது அறிந்து கொண்டுள்ளனர். எனவே அதனை யாரும் சுய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் அனைத்து குரல் பதிவுகளையும் மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் வருடக்கணக்கில் பல சிரமங்களுக்கு மத்தியில் பதிவு செய்த குரல் பதிவுகள் பயனற்றுப் போய் விடும்.
மறுபுறம் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒரு இலட்சத்து 21ஆயிரத்துக்கும் அதிகமாக குரல் பதிவுகள் வேறு தரப்புகளுக்கு கிடைக்கப் பெற்றால் அதனை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த விடயத்தில் அவர் உரிய வகையில் செயற்பட வேண்டும்.
மேலும் சமூகத்தை சீரழிக்கும் பல்வேறு குரல்பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையிலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு மதகுருமார்கள் தடை விதிக்க கோராமல் இருப்பது சிந்திக்கத்தக்க விடயமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM