பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 15 பேர் பலி

Published By: Digital Desk 3

11 Jan, 2020 | 10:54 AM
image

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவாசலில் தொழுகையின் போது இடம்பெற்ற  தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன்  19 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் குவெட்டாவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேர தொழுகைகளில் கலந்து கொண்டிருந்த ஒருவர் சம்பவம் தொடர்பில் கூறுகையில்,

பள்ளிவாசலில் மீது தாக்குதல் நடந்த நேரத்தில் சுமார் 60 பேர் இருந்தனர். பள்ளிவாசலில் தொழுகை ஆரம்பமாகிய சில நொடிகளில் தொழுகையில் ஈடுபட்டவர்களின் முன் வரிசையில் குறித்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது  என தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளதை குவெட்டாவின் சாண்டேமன் வைத்தியசாலை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மூன்று முதல் நான்கு பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07