பெரும்பான்மையுடன் கூடிய அரசாங்கம் அமையப்பெறாவிடின் எதிர்காலம் சவால்மிக்கதாகவே அமையும் : பிரதமர் 

Published By: R. Kalaichelvan

09 Jan, 2020 | 04:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் குளறுபடிகளினால் தற்போது தோற்றம் பெற்றுள்ள சவால்களுக்கு பொதுத்தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

பெரும்பான்மையுடன் கூடிய பலமான அரசாங்கத்தை அமைக்க முடியாவிடின்  எதிர்காலத்தில் சவால்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன இளைஞர் சம்மேளனம் இன்று அலரி மாளிகையில்  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்  கொண்டு கலுத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களுக்கு பல்வேறு   வாக்குறுதியினை வழங்கியே 2015ம் ஆண்டு ஆட்சியமைத்தது.  ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டன.  ஏமாற்றமடைந்த இளைஞர்கள் நவம்பர் 16ம் திகதி அப்போதைய ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகள்   அனைத்தும் முழுமைப்படுத்தப்படும்.

தற்போதைய சூழலுக்கு பொருத்தமாக அமையும் விடயங்கள் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்பதனை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும். தேவைற்ற விடயங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் கவனம் செலுத்தாது.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் குளறுபடிகளினால் இன்று முத்துறைகளிலும்  மோசடிகள் ஏற்பட்டுள்ளமை   வெளிப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுபவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாத நிலைமையும் இத்திருத்தத்தினால் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும்.   அரசியலமைப்பின் 19வது திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு பொதுத்தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வுக்கான முடியும்.

அனைத்து சவால்களையும் பாராளுமன்றத்தின்  பெரும்பான்மை பலத்துடன்  வெற்றிக் கொள்ளும் உபாயோமும் தெரிவும்,  எழுந்துள்ள சவால்கள் வெற்றிப் பெற்றால் அதனை எதிர்காலத்தில்  பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப் பெற்ற மக்களாணை  பொதுத்தேர்தலிலும் கிடைக்கப் பெற வேண்டும். இதில்  இளைஞர்களின் பங்களிப்புடி இன்றியமையாததாகும். 2015ம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த காலத்தில் இருந்து  2019.11.16ம் திகதி வரையில் வழங்கிய ஒத்துழைப்பினை    அனைவரும் தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36