குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயம்!

Published By: Vishnu

07 Jan, 2020 | 08:17 PM
image

(செ.தேன்மொழி)

குருணாகலை - கொழும்பு பிரதான வீதியில் பஸ், முச்சக்கரவண்டி மற்றும் பாரவூர்தி மேதி இடம்பெற்ற விபத்தில் சிறுவரொருவர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். 

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகலை - கொழும்பு வீதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவிலே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொத்துஹெர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குருணாகலையிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற தனியார் பஸ் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை கடந்து செல்லமுற்பட்டுள்ளது. 

இதன்போது முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ள பஸ் பின்னர் எதிர்திசையில் வந்த பாரவூர்தியுடனும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது பஸ்சுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் , சம்பவத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுள் ஒரு சிறுபிள்ளையும் இருப்பதாக தெரிவிக்கிப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31