ரஞ்சன் ராமநாயக்க - ஷானி  அபேசேகரவின் குரல் பதிவுகள் தொடர்பில் நடுநிலையான விசாரண‍ை அவசியம் - ரோஹித 

Published By: Vishnu

06 Jan, 2020 | 04:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவும் உரையாடியதாக குறிப்பிடப்படும் குரல் பதிவுகள் தொடர்பில்  பதில் பொலிஸ்மா அதிபர் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என  சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட போது பொலிஸார் செயற்பட்ட விதமும் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தையும், நேற்று நீதிவான் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் நேற்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதவான் நீதிமன்றம்  பிணை வழங்கியதை தொடர்ந்து  சமூக  வலைத்தளங்களில் பல விடயங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.   

குறிப்பாக ஷானி அபேசேகரவும், ரஞ்சன் ராமநாயக்கவும் உரையாடிய   குரல் பதிவுகள் பல வெளியாகியுள்ளன. மரண தண்டனை  கைதியான துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்பும் நோக்கம் தொடர்பில்     இருவரும் அதிகாரததில் இருந்த வண்ணம் உரையாடியுள்ளார்கள். 

இவ்விடயம் தொடர்பில் உரிய  விசாரணைகளை மேற்கொள்வதை விடுத்து பொலிஸார்  சொற்ப விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.   

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க   நீதிபதிகளுடன்  தொலைபேசியில் தொடர்புக் கொண்டு உரையாடிய குரல் பதிவுகளையும் தொடர்ந்து ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38