”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”: முத­லா­வது பெண் ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

Published By: J.G.Stephan

05 Jan, 2020 | 03:04 PM
image

நான் அதி­கா­ரங்­களை ஏதேச்­ச­தி­கா­ர­மாக பயன்­ப­டுத்­துவதற்காகவோ, அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவோ ஆளுநர் பத­வியைப் பெற­வில்லை. மாகாண நிர்­வா­கத்­துக்­கான எல்­லையை நான் நன்கு அறிந்து வைத்­துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்­களை அடி­யொற்­றி­ய­தாக இருக்­கையில், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களோ வரம்பு மீறல்­களோ இடம்­பெ­று­வ­தற்கு சாத்­தி­ய­மில்லை என்று வட­மா­கா­ணத்தின் முத­லா­வது பெண் ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:-அரச நிர்­வா­கத்­து­றையில் நீண்ட அனு­ப­வத்­தினைக் கொண்ட நீங்கள்  சேவை­யி­லி­ருக்­கும்­போதே வடக்கு மாகாண ஆளுநர் பத­விக்கு  நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?  

பதில்:- அர­சாங்க நிர்­வாக சேவையில் அதி­யுச்ச பத­வி­யாக செய­லாளர் பத­வியே காணப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ராக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தேன். அத­னை­ய­டுத்து சொற்­ப­கா­லத்­தி­லேயே வட­மா­காண ஆளுநர் பத­வியை எனக்கு வழங்­கு­வ­தென தீர்­மானம் எடுக்­கப்­பட்டு அதனை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு என்­னி­டத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­டது. 

அச்­ச­ம­யத்தில் தனிப்­பட்ட வாழ்க்­கை­யுடன் தொடர்­பு­ப­டுத்தி நான் சிந்­தித்­த­போது அப்­ப­த­வியை ஏற்­பது மிகவும் கடி­ன­மா­ன­தொன்­றாக அமையும் என்று கரு­தினேன். ஏனென்றால், எனது பிள்­ளைகள் தலை­ந­க­ரத்தில் தொழில்­பு­ரி­வ­தோடு, கற்­கை­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ளார்கள். எனது தாயார் முதுமை நிலையில் உள்ளார். ஆகவே அவர்­களை பிரிந்து செல்­வ­தென்­பது நெரு­ட­லாக இருந்­தது. 

எனினும், ஜனா­தி­பதி கோத்­தா­பய வட­மா­காணம் தொடர்­பாக கொண்­டி­ருக்கும் கரி­ச­னைகள் தொடர்­பிலும் செயற்­றிட்­டங்­களை நடை­மு­றைச்­சாத்­தி­ய­மாக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் உள்­ள­தாகவும் கூறி­யி­ருந்தார். அந்­த ­வ­கையில் எனது மக்­களின் தேவை­களை அறிந்­தி­ருக்கும் நான் அவர்­க­ளுக்கு மீண்டும் ஒரு­த­டவை சேவை­யாற்­று­வ­தற்கு கிடைத்­தி­ருக்கும் சந்­தர்ப்­பத்­தினை இழப்­ப­தற்கும் விரும்பவில்லை.

ஈற்றில் அப்­ப­த­வியை பெற்­றுக்­கொள்­வ­தென்ற முடிவை எடுத்­தி­ருந்தேன். அத­ன­டிப்­ப­டையில் எனக்­கான நிய­ம­னத்­தி­னையும் ஜனா­தி­பதி முன்­னி­லையில் பெற்­றுக்­கொண்டு கட­மை­களை பெறுப்­பேற்­றுள்ளேன்.

என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில், வவு­னியா மாவட்­டத்தில் நெருக்­க­டி­யான சூழலில் கட­மை­களை ஆற்­றி­யி­ருந்தேன். குறிப்­பாக கிளி­நொச்சி, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் இருந்த 3 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் அசா­தா­ரண சூழலில் வவு­னியா நோக்கி இடம்­பெ­யர்ந்து  வந்­த­போது அவர்­க­ளுக்கு அடைக்­க­ல­ம­ளித்து பாது­காக்க வேண்­டிய பாரிய பணி­யொன்று எனக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.  

அந்­தப்­ப­ணியை பொறுப்­பெ­டுத்த நான் அந்த மக்­களின் நெருக்­களை போக்­கு­வ­தற்கு முழு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தேன். அதன்­பின்னர் எனக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துக்­கான இட­மாற்றம் வந்­த­ போது வவு­னி­யா­வி­லி­ருந்து செல்­ல ­வேண்டாம் என்று எத்­த­னையோ பெண்கள் கண்­ணீ­ருடன் கோரிக்கை விடுத்­தார்கள்.

அந்தக் குரல்­களும் அவர்கள் என்­மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கையும், எதிர்­பார்ப்­புக்­களும் இன்றும் எனது காதில் ஒலித்­துக்­கொண்டும் கண்­முன்னே தோன்­றியும்  மறை­கின்­றன.  

கேள்வி:- ஆளுநர் பத­விக்­காக உங்­க­ளு­டைய பெயர் முன்­மொ­ழி­யப்­பட்­ட­போதும் பத­வி­யேற்பு வரையில் தளம்பல் நிலை தொடர்ந்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- நான் 35வரு­டங்­க­ளாக நிர்­வாக சேவையில் இருந்து வரு­கின்றேன்.அதி­லி­ருந்து திடீ­ரென ஓய்வு பெறு­வது என்­பது இய­லாத விட­ய­மாக இருந்­தது.  அண்­மையில் அமைச்சின் செய­லாளர் பதவி கிடைக்­கப்­பெற்ற நிலையில் அதில் தொடர்­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளையே மேற்­கொண்­டி­ருந்தேன். ஆளுநர் பத­வியைப் ஏற்கும் விட­யத்தில் அரச அதி­கா­ரி­யாக நிதா­ன­மாக சிந்­திக்­க­ 

வேண்­டிய தேவை இருந்­தது. அரச சேவையில் இருந்த நான் எனது சேவைக்­கா­லத்­தினை நிறை­வு­றச் ­செய்­யாது வெளி­யே­று­வதும் கடி­ன­மான விட­ய­மாக இருந்­தது.

அந்த விட­யங்கள் தொடர்பில்  ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பல­னாக சில முன்­மொ­ழி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஜனா­தி­பதி அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தின் ஊடாக என்­னு­டைய சேவைக்­கான நன்­மை­களைப் பாது­காத்­துக்­கொண்டு மக்கள் சேவைக்­காக எனக்கு ஆளுநர் பத­வியை தற்­போது வழங்­கி­யுள்ளார். அதற்­கான நடைமு­றை­களை நிறை­வேற்­று­வதில் தான் இழு­ப­றி­யான நிலை­மைகள் இருந்­தன. 

கேள்வி:- வட­மா­கா­ணத்­துக்கு இது­வரை நிய­மிக்­கப்­பட்ட ஆளு­நர்­களை பொறுத்­த­வ­ரையில் இரா­ணுவ, அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளார்கள். அவ்­வி­த­மான வகை­ய­றைக்குள் இல்­லாத நீங்கள் எவ்­வி­த­மான தனித்­து­வத்­தினை பேணு­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றீர்கள்? 

பதில்:- என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் கடந்­த­கா­லத்தில் இருந்த ஆளு­நர்­க­ளுடன் ஒப்­பிட்டு கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த விரும்­ப­வில்லை. அத்­துடன் அவர்­களின் செயற்­பா­டுகள் குறித்து அல­சிப்­பார்க்­கவும் நான் விரும்­ப­ வில்லை. நடந்­த­வைகள் நடந்­த­வை­க­ளா­கவே இருக்­கட்டும். இனி நடக்­க­வி­ருப்­பதை செவ்­வனே செய்­வது பற்­றியே சிந்­திக்க வேண்டும். 

நான் பத­வி­யேற்ற நாள் முதல் எனது பதவி நிலைக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொறுப்­புக்­களை முறை­யாக முன்­னெ­டுத்துச் செல்­வ­தையே விரும்­பு­கின்றேன். நிச்­ச­ய­மாக எனது செயற்­பா­டு­களில் தனித்­து­வ­மான தன்மை இருக்கும். அது வடக்கு மாகா­ணத்­தினை பொரு­ளா­தார ரீதியில் தலை­நி­மிர்ந்து நிற்கச் செய்­வதும், மக்­களின் வாழ்­வி­யலை உயர்த்­து­வ­துமே இலக்­காக இருக்கும்.

கேள்வி:- வட­மா­காண மக்கள் தமது சொந்த நிலங்­க­ளுக்கு திரும்­பாத சூழல்  நீடிக்­கின்ற நிலையில் அது­கு­றித்து விசேட கவ­னத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றீர்­களா?

பதில்:- தமது சொந்த நிலங்­க­ளுக்கு திரும்­பு­வ­தற்­காக காத்­தி­ருக்கும் மக்­களின் வேட்­கை­யையும், உரி­மை­யையும் நிறை­வேற்ற வேண்­டி­யது அரச உத்­தி­யோ­கத்தர் என்ற அடிப்­ப­டையில் எனது கட­மை­களில் ஒன்­றாக இருக்­கின்­றது. ஆகவே மக்கள் தமது சொந்த நிலங்­க­ளுக்கு திரும்­பு­வது மட்­டு­மல்ல அவர்­களின் வாழ்­வா­தாரம், வேலை­வாய்ப்பு உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளிலும்  எனது கரி­சனை இருக்­கின்­றது. 

அதற்­கு­ரிய செயற்­றிட்­டங்­களும் ஜனா­தி­ப­தி­யி­டத்தில் இருக்­கின்­றன. அவை குறித்து சில விட­யங்­களை என்­னி­டத்தில் பகிர்ந்து கொண்டும் உள்ளார். ஆகவே அச்­செ­யற்­றிட்­டங்­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­ற­போது எதிர்­பார்த்த மாற்றம் நிச்­சயம் உரு­வாகும் என்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது. 

மேலும் எனக்கு தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்கள் எவையும் இல்லை. நான் அர­சியல் பின்­ன­ணியைக் கொண்ட ஒரு­வரும் அல்ல. அத்­துடன் இப்­ப­த­வியை முன்­னி­லைப்­ப­டுத்தி எதிர்­கா­லத்தில் நக­ர­வேண்­டிய வேறு இலக்­கு­களும் இல்லை. கடந்த காலங்­களில் எவ்­வாறு எனது செயற்­பா­டு­களை அர்ப்­ப­ணிப்­புடன் முன்­னெ­டுத்­தி­ருந்­தேனோ அவ்­வி­த­மா­கவே தொடர்ந்தும் செயற்­பட எதிர்­பார்த்­தி­ருக்­கின்றேன். 

மேலும் வவு­னியா மாவட்ட செய­லா­ள­ராக நான் கட­மை­யாற்­றி­ய­போது நாட­ளா­விய ரீதியில்  மிக வறு­மை­யான மாவட்­டங்­களில் ஒன்­றாக அம்­மாவட்டம் இருந்­தது. அம்­மா­வட்­டத்தின் வறுமை வீதமும் 24சத­வீ­த­மாக இருந்­தது. 2012இல் நான் அங்­கி­ருந்து இட­மாற்றம் பெற்ற சம­யத்தில் அம்­மா­வட்­டத்தின் வறுமை மட்­ட­மா­னது வெகுவாகக் குறைந்ததோடு கொழும்பு, கம்­பஹா போன்­ற­வற்­றுக்கு அண்­மித்த வகையில் முன்­னேற்றம் கண்­டி­ருந்­தது. 

அதே­போன்று தான் வறு­மை­யான மாவட்­டங்­களின் பட்­டியலில் முதலில் இருந்த மட்­டக்­க­ளப்பும் எனது பணிக் 

­கா­லத்தில் கணி­ச­மான முன்­னேற்­றத்­தினை எட்­டி­யி­ருந்­தது. ஆகவே அடிப்­படை மனித அபி­வி­ருத்­திக்­கான சுட்­டி­களை அடை­யாளம் கண்டு குறி­காட்­டி­களை நோக்கி மேம்­ப­டுத்­து­கின்­ற­போது நிச்­ச­ய­மான மாற்­றத்­தினை அடைய முடியும். அதனை அனு­ப­வ­ரீ­தி­யா­கவும் கண்­டி­ருக்­கின்றேன். 

கேள்வி:-வடக்கில் குடும்­பங்­க­ளுக்கு தலை­மை­தாங்­குதல் உள்­ளிட்ட சமூ­கத்தில் முன்­னே­று­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ள பெண்­க­ளுக்கு அம்­மா­கா­ணத்தின் முதற் பெண் ஆளுநர் என்ற வர­லாற்றுப் பதிவைக் கொண்­டுள்ள நீங்கள் எவ்­வி­த­மான செய்­தியை கூற தலைப்­பட்­டி­ருக்­கின்­றீர்கள்? 

பதில்:- முத­லா­வ­தாக வாழ்க்­கையில் எதிர்­நீச்சல் போட்­டுக்­கொண்­டி­ருக்கும் பெண்கள் சுய­நம்­பிக்­கையை இழந்து விடக்­கூ­டாது. அதனை மென்­மேலும் அதி­க­மாக ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கொண்­டி­ருக்க வேண்டும். அவ்­வா­றான நம்­பிக்­கையின் கார­ண­மா­கவே அவர்­களின் ஆற்­றலை வெளிப்­ப­டுத்த முடியும். 

தமிழ் பெண்­களைப் பொறுத்­த­வ­ரையில் கலா­சார, பண்­பாட்டு ரீதி­யாக தங்கி வாழும் மனப்­பான்­மையில் இருக்­கின்­றார்கள். இந்த மனப்­பான்­மையே அவர்­களை அனு­தா­பத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளாக மாற்­றிக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆகவே தம்­மீ­தான நம்­பிக்­கையை அதி­க­ரிக்கச் செய்­கின்­ற­போது அவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் சாத­னை­யா­ளர்­க­ளாக மாறு­வார்கள். 

கேள்வி:- போரின் தாக்­கங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்ள வடக்கு மாகா­ணத்தில் பல்­வேறு நிலை­களில் விசேட தேவை­யு­டைய தரப்­பி­னர்கள் காணப்­ப­டு­கின்ற நிலையில் அவர்கள் பற்­றிய விசேட கருத்­திட்­ட­மொன்றை முன்­மொ­ழியும் திட்­ட­முள்­ளதா?

பதில்:- பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள், சிறு­வர்கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள், முதி­யோர்கள் என்று பல்­வேறு தரப்­பினர் விசேட தேவை­களைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை நான் நன்கு அறிவேன். மட்­டக்­க­ளப்பில் நான் மாவட்ட செய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­ய­போது தான் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்­காக நாச்­சியார் உண­வகம் என்ற திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்தி அங்­குரார்ப்பணம் செய்­தி­ருந்தேன்.  அந்தக் கருத்­திட்டம் தற்­போது வடக்கு உட்­பட நாட­ளா­விய ரீதியில் படிப்­ப­டி­யாக வெவ்வேறு பெயர்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை ஈடேற்­று­வது குறித்து நான் சிந்­தித்­த­போது பெண்­க­ளுக்­கென்றே தனித்­து­வ­மாக உள்ள சம­யல்­க­லையை மையப்­ப­டுத்தி இந்தக் கருத்­திட்­டத்­தினை முன்­மொ­ழிந்தேன். இதற்­காக விசேட பயிற்­சி­களோ, செல­வீ­னங்­களோ இன்றி அவர்­க­ளுக்­குள்ள இயற்­கை­யான திறனை மையப்­ப­டுத்தி அவர்­களை ஒருங்­கி­ணைத்து இத்­திட்­டத்­தினை முன்­மொ­ழிந்தேன். அது வெற்­றிப் ­பா­தையில் செல்­வ­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். 

கேள்வி:- வடக்கில் சட்டம் ஒழுங்கு நடை­மு­றையில் இருந்தும் வன்­மு­றைக்­கு­ழுக்­களின் நட­மாட்­டமும் செயற்­பா­டு­களும் தொடர்ந்தும் பதற்­ற­மான சூழல் நீடிப்­ப­தற்கு கார­ண­மா­கின்ற நிலையில் அது குறித்து உங்­க­ளது பார்வை எவ்­வா­றி­ருக்­கப் ­போ­கின்­றது? 

பதில்:- சட்டம் தன் கட­மையை செய்ய வேண்டும். அதற்கு அனை­வரும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும். இந்த இரண்டு விட­யங்­க­ளையும் நாம் அர­சியல் மயப்­ப­டுத்­தக்­கூ­டாது. சமூகச் சட்­டங்­களை மீறு­கின்­ற­வர்கள் சமூக குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு பார­பட்­ச­மின்றி சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். ஆகவே சமு­கத்தில் அமை­தி­யையும் சமா­தா­னத்­தி­னையும் நிலை­பெறச் செய்­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க தயா­ரா­கவே உள்ளேன். 

கேள்வி:- நீங்கள் மாவட்ட செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய காலத்தில் நடை­பெற்ற ஒருங்­கி­ணைப்புக் கூட்­டங்­க­ளின்­போது அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக இருக்கும் இணைத்­த­லை­வர்­களும், ஆளு­நரும் முரண்­ப­டு­வார்கள். அதே­போன்று மாகாண சபை ஆட்­சியில் ஆளுநர் தலை­யீ­டு­களைச் செய்­வ­தா­கவும் கட்சி அர­சி­யலை திரை­ம­றைவில் வைத்து செயற்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் அடுக்­க­டுக்­காக முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. இந்­நி­லையில் எவ்­வி­த­மான சார்பு நிலை­யற்­றவர் என்று உங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் எதிர்­கா­லத்தில் ஆளு­நரின் அதி­கா­ரத்தை மீறிய தலை­யீ­டுகள் இருக்­காது என்று நம்­பிக்கை கொள்ள முடி­யுமா? 

பதில்:- ஆம், ஏனென்றால் மாகாண நிர்­வா­கத்தின் எல்­லை­களை நான் தெளி­வாக தெரிந்து வைத்­துள்ளேன். நான் அதி­கா­ரங்­களை ஏதேச்­ச­தி­கா­ர­மாக பயன்­ப­டுத்­துவதற்காகவோ அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவோ ஆளுநர் பத­வியைப் பெற­வில்லை. எனது பணிகள் அனைத்தும் மக்­களை அடி­யொற்­றி­ய­தாக இருக்­கையில் அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களோ வரம்பு மீறல்­களோ இடம்­பெ­று­வ­தற்கு சாத்­தி­ய­மில்லை. 

வடக்கில் வேறு­பட்ட அர­சியல் கட்­சிகள், குழுக்கள், கொள்கைரீதியான வேறுபாட்டைக் கொண்ட தரப்பினர்கள் என்று பல்வேறு தரப்பினர் இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் பணியாற்றியபோது அத்தகைய வெவ்வேறுபட்ட தரப்பினருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. 

மேலும் தனிமனிதர்களுக்கு காணப்படுகின்ற சுயவிருப்புவெறுப்பின் அடிப்படையில் ஏற்படுகின்ற விட்டுக்கொடுப்பற்ற போக்குகளுக்கு அரசியல் வடிவம் அல்லது  நிருவாக வடிவம் கொடுப்பதன் காரணத்தால் தான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அரசியல் பிரதிநிதிகளும் சரி அரச அதிகாரிகளும் சரி மக்களின் நலன்களையும் திட்டங்களையும் பேணிக்காப்பதையும் நிறைவேற்றுவதையும் பொறுப்பாக கொண்டுள்ளார்கள். இந்த விடயத்தில் சரியான புரிதல் ஏற்படுகின்றபோது முரண்பாடுகள் அனைத்தும் பனிபோல் அகன்றுவிடும். 

கேள்வி:- 13ஆம் திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்:- 13ஆம் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஜனாதிபதி கோத்தாபய தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அதுசார்ந்த இதர விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவரிடத்திலேயே உள்ளது. அவருடைய தீர்மானத்தின் அடிப்படையில் தான் அந்த விடயங்கள் இடம்பெறவுள்ளன. 

கேள்வி:- இறுதியாக வடக்கு மாகாண அரசியல், சிவில் தரப்பினரிடத்தில் உங்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது? 

பதில்:- போரின் பாதிப்புக்களிலிருந்து மீண்டெழுவதையே நாம் அனைவரும் கனவாக கொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தில்  வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு அனைவரும் பேதமின்றி ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் மனதில் இருக்கும்  இறுக்கங்களையும், குறைகளையும் களைந்து  இதய சுத்தியுடன் இணைந்து மக்கள் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். 


ஆசிரியை தொடக்கம் 
ஆளுநர் வரை

யாழ்ப்­பாணம் இள­வாலை பத்­தா­வத் தையை சொந்த இட­மாகக் கொண்ட பிரின்ஸ் சரோ­ஜினி மன்ம­த­ராஜா சார்ள்ஸ் யாழ்.பல்­க­லைக்கழகத்தில் பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்­த­பின்னர் 1985 இல் ஆசி­ரிய சேவையில் தன்னை ஈடு­ப­டுத்திக் கொண்டார். அத்துடன் ரஜ­ரட்ட மற்றும் பேரா­தனை பல்கலையில் அனர்த்­த ­மு­கா­மைத்துவம் மற்றும் வணிக நிருவாகம் ஆகி­ய­வற்றில் முது­மாணி கற்கையையும் நிறைவு செய்தார். பின்னர் 1991ஆம் ஆண்டில் இலங்கை நிரு­வாக சேவைக்கு தமிழ் சமூகத்தினை சேர்ந்த ஒரேயொருவராக உள்ளீர்க்கப்பட்டு முத­லா­வதாக அநுராதபுர மாவட்ட செய­லகத்தில் நியமனத்தினைப் பெற்றார்.

அத­னை­ய ­டுத்து வவு­னியா மாவட்ட உதவி அர­சாங்க அதி­ப­ராக பத­வி­யேற்­றுக்­கொண்ட இவர் 2008இல் வவு­னியா மாவட்ட செய­லா­ள­ரா­கவும், 2012இல் மட்டக்க­ளப்பு மாவட்ட செய
லா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றினார். 2017 செப்­டெம்­பரில் இலங்கை சுங்கத்­தி­ணைக்­கள பணிப்­பாளர் நாயக­மாக நிய­மிக்­கப்­பட்­டவர் 2019 நவம்­பரில் சுகா­தாரம், போஷாக்கு சுதேச மருத்­துவ அமைச்சின் செய
லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டு 30 டிசம்பர் 2019இல் வட­மா­காண ஆளு­ந­ராக நிய­மனம் பெற்றார். 


நேர்­காணல்:- ஆர்.ராம்


 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04