ஜனாதிபதித் தேர்தலில் வட கிழக்கு வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருக்கின்றது -  ரவிகரன்

05 Jan, 2020 | 01:14 PM
image

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், வட கிழக்கில் தமிழ்மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருப்பதாகவும். தமிழ் மக்களுக்கு ஓர் தீர்வு கிட்டும்வரையில் தொடர்ந்து போராடுவோமெனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 04.01நேற்றைய நாள் இடம்பெற்ற தமிழ் அரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் அரசு கட்சி தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை ஏற்று செயற்படுவதனாலேயே இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயற்பட்டுவருகின்றது.

எப்போதும் தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றுக்கொண்டேயிருக்கும், இக்கட்சியை எப்போதும் வீழ்த்தவே முடியாது.

அத்தோடு கடந்த அரசதலைவர் தேர்தலில் வடகிழக்கில் தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருக்கின்றன.

தமிழர்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களை மறந்துவிடவில்லை, குறிப்பாக இளைய சமூகம் கூட கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களயும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினையும் மறந்துவிடவில்லை.

கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்து, நடாத்திய கொத்துக்குண்டு, பல்குளல் செல் தாக்குதல்கள், அவர்களுடைய காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் எவற்றையும் எமது மக்கள் மறந்துவிடவில்லை. அதனையே கடந்த அரச தலைவர் தேர்தல் உணர்த்தியுள்ளது.

எனவே எமது தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிட்டும்வரையில் தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59