பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்பி விடலாம். ஆனால் சமஷ்டி என கூறி நாட்டை துண்டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. தேசிய பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை மற்றும் இராணுவத்தினரின் கௌரவம் இதுவே எனது கொள்கையாகும்.
இதனை அடிப்படையாக கொண்டவர்களுடன் சேர்ந்து முதல்வனாகவும் அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தில் ஒரு சதவீதத்தை கூட நல்லாட்சி அரசாங்கம் பூர்த்தி செய்ய வில்லை. மாறாக நல்லிணக்கம் என்ற போர்வையில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை உருவாக்கும் சுய நல அரசியல் செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகின்றன. எனவே மீண்டும் நாட்டில் அமைதியின்மை ஏற்படுவதற்கு முன்னர் மாற்றத்தை உருவாக்க அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்ற போது இதனை விட மோசமான நிலையே காணப்பட்டது. போர் நிறுத்தம் என்ற போர்வையில் இராணுவ அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் விடுதலை புலி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மஹிந்த ஆட்சியில் முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்தில் அதனை நிறுத்தி இராணுவத்தின் சேவை எது என்பதை கூறி அவர்களை போருக்கு தயாராகும் படி கூறினோம். பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அரசியல் தலைமைத்துவங்களின் பொறுப்பு . இராணுவத்திற்கு அந்த பணிகள் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன , விஜேதுங்க , பிரேமதாச மற்றும் சந்திரிக்கா ஆகியோரின் ஆட்சி காலத்திலும் நாட்டில் போர் காணப்பட்டது.
ஆனால் சர்வதேசத்திற்கு அடிப்பணியாது போரை முன்னெடுத்ததால் இராணுவம் எம்மீது நம்பிக்கை வைத்து களத்தில் போராடியது. சிறந்த வகையில் போரை முன்னெடுத்து நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தோம். 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய நல்லிணக்கத்திற்காக நாம் முன்னெடுத்த பணிகளில் தற்போதைய அரசாங்கம் ஓரு சத வீதத்தை கூட செய்யவில்லை.
போர் முடிந்து இரண்டரை வருடத்திற்குள் மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள் குடியமர்த்தினோம். வீடுகள் அமைத்து கொடுத்தோம். முக்கிய இராணுவ முகாம்களை தவிர ஏனைய அனைத்து முகாம்களையும் அகற்றி மக்களின் காணிகளை மீள வழங்கினோம். , நாம் ஆட்சியை விட்டு ஒதுங்கும் போது நாட்டில் ஒரு சோதனை சாவடி கூட இல்லை. மிகவும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தினோம்.
ஈ.பி.டீ.பி போன்றவர்களுக்கு பாதுகாப்பிற்காக வழங்கிய ஆயுதங்களை மீள பெற்றுக்கொண்டோம். 13 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தோம். இதில் ஒரு சதவீதத்தை கூட தற்போதைய அரசாங்கம் செய்ய வில்லை . . ஆனால் நல்லிணக்கம் என கூறிக்கொண்டு இராணுவத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது. இதனால் 79 சதவீதமான சிங்கள மக்கள் மத்தியில் குரோத நிலையே உருவாகும்.
இவ்வாறு ஒரு போதும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இரு இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி குறுகிய அரசியல் நலன்களை பெற்றக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆட்சி மாற்றத்திற்கு உதவியதற்காக சர்வதேச நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிக்க கூடாது. இதனையே நாங்கள் கண்டிக்கின்றோம்.
போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசும் அமெரிக்கா ஆப்பானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அது குறித்த பல நூல்களை கடந்த நாட்களில் நான் வாசித்தேன். வீடுகளில் யார் இருக்கின்றனர் என்று கூட பார்க்காது குண்டுகளை எறிந்து விட்டே வீட்டிற்குள் செல்வர். இதனால் உயிரிழந்த பெண்களினதும் குழந்தைகளின் எண்ணிக்கையும் பெருந்தொகையாகும். இராணுவ இழப்புகளை குறைப்பதற்கு கடும் ஆயுத பாவனையே அமெரிக்க இராணுவத்தின் போர் உத்தியாகும்.
இவ்வாறு நாங்கள் ஒரு போதும் வடக்கில் போரை முன்னெடுக்க வில்லை. இராணுவ வீரர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மக்களின் உயிரிழப்புகளை தடுத்தனர்.
எனவே தற்போதைய அரசாங்கத்தின் அடிமைத்தன போக்கை அனுமதிக்க முடியாது. உயிருடன் இருக்கின்றனரா ? இல்லையா? என்று கூட தெரியாது பிரகீத் எக்னெலியகொட காணாமற்போன சம்பவம் தொடர்பில் இராணுவ புலணாய்வு அதிகாரி சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதனை மாற்ற வேண்டும். பொதுபல சேனா எனது அமைப்பு என கூறி பிரசாரம் செய்யப்பட்டமையினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் குறைந்தன.
ஆனால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்துக் கொண்டுள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்பி விடலாம். ஆனால் சமஷடி என கூறி நாட்டை துண்டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே மக்கள் ஒன்றிணைய வேண்டும். நான் முதல்வனா ? இரண்டாமவனா ? என்பது தற்போதைய பிரச்சினையல்ல . தேவைப்பட்டால் முதல்வனாகவும் சிறைக்கு செல்லவும் தயார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM