சுத்தமான குடி நீரைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் வறுமை ஒழிப்புக்கு பாரிய பங்களிப்பு செய்யலாம் : வாசுதேவ 

Published By: R. Kalaichelvan

01 Jan, 2020 | 04:56 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐந்து வருட காலத்துக்குள் இந்த நாட்டின் வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். சகலருக்கும் குடி நீரைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் வறுமை ஒழிப்புக்கு பாரிய பங்களிப்பு செய்யலாம். அத்துடன் குடி நீர் ஒரு விற்பனைப் பொருளல்ல. ஆனால் அதற்காக செலவிடப்படும் தொகை ஈடு செய்யப்பட வேண்டுயுள்ளது என நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் தொம்பகம்மன மீள் குடியேற்றக் கிராமத்துக்கான சமூக நீர்வழங்கல் திட்டத்தை ஆரப்பித்து வைத்து உரை நிகழ்த்துகையில் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையும் பாரிய முதலீடுகளை மேற்கொண்டே மக்களுக்கு குழாய் மூலம் தூய குடிநீரைப்பெற்றுக் கொடுக்கின்றன. இதற்காக இந்த நிறுவனங்கள் கடன் உதவிகளைப் பெற்றே முதலீடுகளை செய்கின்றன.

இந்த மாவட்டத்தில் 17 முக்கிய நீர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவரும் அதேவேளை, சில நீர் திட்டங்கள் செயலிழந்துள்ளன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப நான் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

சம்பளத்தை மட்டும் குறிக்கோளாக் கொண்டு எமது அதிகாரிகள் பணியாற்றவில்லை. அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதன் மூலமே மக்கள் நீர் வழங்கல் சேவையை அனுபவிக்கின்றனர்.

மேலும்  எமது அரசாங்கத்தின் ஐந்து வருட காலத்துக்குள்  நாட்டின் வறுமையை ஒழிப்பதே நோக்கமாகும்.  சகலருக்கும் குடி நீரைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் வறுமை ஒழிப்புக்கு பாரிய பங்களிப்பு செய்யலாம் என்று நினைக்கின்றேன். குடி நீர் ஒரு விற்பனைப் பொருளல்ல.

என்றாலும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு பாரியதொரு தொகையை அரசாங்கம் செலவிட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்யப்பட வேண்டுயுள்ளது. அதற்காகவே குறிப்பிட்டதொரு தொகை நீர் கட்டணமாக அறவிடப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49