அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளிக்கும் போது ஐ.தே.க.வினர் பலர் சிக்குவார்கள்  

Published By: Vishnu

01 Jan, 2020 | 02:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை  நாட்டுக்கு கொண்டு வருவதற்கான உரிய ஆவணங்களை நல்லாட்சி அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவில்லை.  பிணைமுறி மோசடி குறித்து எவ்விதமான உரிய நடவடிக்கைகளும் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல்.பீறிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனுவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

லங்கை  பிரஜையல்லாத ஒருவரை நாடு கடத்தல் என்பது சாதாணர விடயமல்ல. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் விவகாரத்திலும் இதுவே செல்வாக்கு  செலுத்துகின்றன.

சிங்கப்பூர் நாட்டு பிரஜையை மத்திய வங்கியிள் ஆளுநராக நியமித்தமை எமது நாட்டு கல்விமான்களை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகவே கருத முடியும். 

மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கள்  மோசடி  திடீரென இடம்பெற்ற சம்பவம் அல்ல அரச அதிகாரத்துடன் இடம் பெற்ற மோசடியாகும் இதற்கு அப்போதைய ஆட்சியில்  பிரதான    பதவிகளில் இருந்த அனைவரும் பொறுப்பு கூற  வேண்டும்.

பினை முறி மோசடியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு கடந்த அரசாங்கம் எவ்விதமான உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. நாட்டுக்கு  அவரை கொண்டு வருவதற்கான  உரிய  ஆவணங்கள் கடந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கபபடவில்லை என்று  தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13