எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் 

Published By: R. Kalaichelvan

01 Jan, 2020 | 02:05 PM
image

(எம்.மனோசித்ரா)

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடன உரையை அடுத்து அன்றைய தினமே பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

 

கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. 

அதில் இவ்வருடம் ஜனவரி 07 ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர் கூட்டத்தின் பின்னர் பிற்பகல் 1 மணிக்கு கூடும் பாராளுமன்ற அமர்வு மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளது. 

மேலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரினால் அறிவிக்கப்படுதல் உள்ளிட்ட சபாநாயகரின் அறிவிப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளது. 

நாளை ஜனாதிபதியினால் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் பற்றி கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அலுவலகத்தினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் சபைமுதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா உள்ளிட்ட பதவிகள் தொடர்பிலும் அறிவிக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22