உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தெளஹித் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட 63 பேரில் இருவர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 61 பேரையும் எதிர்வரும் தை மாதம் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சஹ்ரானின் தந்தையிடம் வாகனம் வழங்கியதாக கைதுசெய்யப்பட்ட இருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் உள்ள தேசிய தெளஹித் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை ஆஜர்படுத்தியபோது பிணை வழங்கப்பட்டவர்களைத் தவிர ஏனையவர்களை எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி வரைய விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவினை பிறப்பித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM