கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 02:38 PM
image

கிளிநொச்சியில் இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடில்லை என அண்மையில்  தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதி கோரியும், இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?, ஜனாதிபதியே தாங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுகளை கையளித்தோம் அவர்கள் எங்கே? சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து. இரவோடு இரவாக ஓ.எம்.பி அமைத்து இலங்கை அரசு எதனை சாதிக்கப் போகிறது? கடத்தாதே கடத்தாதே எமது உறவுகளை இனியும் கடத்தாதே, கையளிக்கப்பட்ட சிறுவர்களை எங்கே மறைத்து வைத்திருக்கின்றாய்? சிறுவர் உரிமை சமவாயத்தில் இலங்கைக்கு அங்கீகாரமா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் செ.கஜேந்திரன், வடக்கு மாசகாண முன்னாள் அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஐங்கரநேசன்,பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள்  உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் பங்கு கொண்டனர்.  ,  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32