பெருந்தலைவர் அஷ்ரபின் மரணத்துக்கு பின்னர் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் தேசிய கோட்பாட்டிலிருந்து விலகி அவர்களுக்கென்று சாம்ராஜ்ய வட்டங்களை உருவாக்க தொடங்கி முஸ்லிம் அரசியலை வியாபார அரசியலாக மாற்றினர் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன்அலி தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சம்மாந்துறை மத்திய குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை சமாதான கூட்டமைப்பின் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளர் எம். எல். நாஸரின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய சமாதான கூட்டமைப்பினராகிய நாம் இரண்டு வருட பயணத்தின் பின் சம்மாந்துறை மண்ணில் ஒரு கிராம மட்ட மத்திய குழுவை நிறுவுவதற்கு போதுமான அளவு இன்று வளர்ச்சியடைந்துள்ளோம் என்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வு எனது ஆரம்ப கால முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைக்கான கட்சி நடவடிக்கைகளை மீட்டுப் பார்க்க செய்கிறது.
நான் அப்போது சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் ஒரு விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
எனது மாணவர்களான ஒரு சிலருடன்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த மண்ணுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த மாணவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் பத்திரிகைகளை விற்று கொள்கைகளை பரப்ப உதவினார்கள்.
எமது இன அடையாளத்தை சகோதர இனத்தவர்கள் அங்கீகரிக்க மறுத்தனர். அதன் காரணமாக எமது தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தவே நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி தமிழ்ப் பேசும் மக்களின் நிர்வாக வசதிகள் கருத்தில் கொள்ளப்பட்டு ஒரு மாவட்டமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எமது அன்றைய மக்கள் பிரதிநிதிகளின் அசமந்த போக்கு காரணமாக மட்டக்களப்பு தென்பகுதியுடன் பிந்தனப்பற்று போன்ற பிரதேசங்களும் சேர்க்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அவ்வாறான தவறுகளை கண்டித்து தலைவர் அஷ்ரப் கரையோர மாவட்டத்தை மையப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கான அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தார். எதிர்க்கட்சி அரசியல் மூலமாகவும் ஆளும்கட்சி அரசியல் மூலமாகவும் இதற்கு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக அன்னாரின் திட்டமிடப்பட்ட படுகொலை எம் சமூக இலக்கை முடக்கிவிட்டது. அதன் பின்னர் வந்த கட்சிகளும் தலைவர்களும் முஸ்லிம் தேசிய கோட்பாட்டிலிருந்து விலகி தங்கள் சாம்ராஜ்ய வட்டங்களை உருவாக்க தொடங்கி முஸ்லிம் அரசியலை ஒரு வியாபார அரசியலாக மாற்றினர்.
இன்று முஸ்லிம் காங்கிரஸின் யாப்பு தலைவர் அஷ்ரப் உருவாக்கிய யாப்பு அல்ல. இப்போது இருப்பது வெறும் சக்கை மாத்திரமே. தலைவர் அஷ்ரபின் கட்டமைப்பு இன்றைய முஸ்லிம் காங்கிரஸில் இல்லை. அரசியல் பீடம் கலைக்கப்பட்டு உயர்பீடம் 90 பேர் கொண்ட சபையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதில் 58 பேரை தலைவர் நியமிக்கலாம் என்று வகுத்து ள்ளனர். அதிகாரம் உள்ள செயலாளர் நீக்கப்பட்டு இந்த ஊரை சேர்ந்தவர் பெயரளவிலான செயலாளராக நியமிக்கப்பட்டார். இன்று அவரின் நிலை என்ன? என்று சிந்தித்து பாருங்கள்.
ரவூப் ஹக்கீம் ஆயுள் கால தலைவராக இருப்பதற்கு ஏற்ப கட்சியை கம்பனியாக மாற்றியதனால்தான் நாம் வெளியேறி, எம்முடன் வெளியேறியவர்களுடன் சேர்ந்து இன்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் பயணிக்கின்றோம். தலைவர் அஷ்ரபின் கொள்கைகள் மரணித்து விடக்கூடாது என்பதற்காக தலைவர் அன்று உருவாக்கி கொடுத்த அதே யாப்பை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பாக கொண்டு இயங்குகின்றோம். ஒரே ஒரு மாற்றத்தை மாத்திரம் செய்துள்ளோம். அதாவது தலைவர் என்ற சொல்லுக்கு பதிலாக தலைமைத்துவ சபை என்று மாற்றியுள்ளோம். எமது முஸ்லிம் தேசியத்துக்கான பயணத்தில் தலைவரின் சிந்தனையில் உருவான கட்சி கட்டமைப்பை மீண்டும் உருவாக்கும் நோக்கில் இன்று நாம் சம்மாந்துறை மண்ணில் கூடியிருப்பது எமது பயணத்தின் இரண்டாம் பாகம் என்றே கூறவும் கொள்ளவும் வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM