சிறந்த எதிர்க்கட்சியாக ஐ.தே.க.வினால் செயற்பட முடியாது - எஸ்.எம்.சந்தி­ர­சேன

30 Dec, 2019 | 11:17 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)
அர­சாங்­கத்தின் குறை­பா­டு­களை  சுட்­டிக்­காட்டும்  பல­மான எதிர்க்­கட்சி ஒன்­றையே   எதிர்­பார்க்­கின்றோம். ஐக்­கிய தேசிய கட்­சி யால் ஒரு­போதும்  சிறந்த எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட முடி­யாது. கட்­சிக்குள் காணப்­ப­ட்ட தனிப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு  மாத்­தி­ரமே அவர்கள் முக்­கி­யத்துவம் கொடுத்து  நாட்டை  கடந்த    ஐந்து வருட   கால­மாக  பாரிய  நெருக்­க­டிக்குள்­ளாக்­கி­யுள்­ளார்கள் என  வன­வ­ளத்­துறை மற்றும்  காணி அபி­வி­ருத்தி  அமைச்சர் எஸ்.எம்.சந்தி­ர­சேன தெரி­வித்தார்.


அவர்  இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
ஜனா­தி­ப­தியின்  கொள்கை   பிர­க­டனம் முறை­யாக  செயற்­ப­டுத்­து­வ­தற்­கான   நட­வ­டிக்­கைகள்     8ஆவது பாரா­ளு­மன்­றத்தின்  4ஆவது  அமர்­வினைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும்.   3ஆம் திகதி முத­லா­வது கூட்­டத்­தொ­டரில்   எதிர்க்­கட்சி  தலைவர் யார் என்­பதும்   உத்­தி­யோ­க­பூர்­வ­மாக   அறி­விக்­கப்­படும் என்று  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்தின் குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்டும் பொறுப்பு   எதிர்க்­கட்­சிக்கு காணப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் பல­மான எதிர்க்­கட்­சியை  எதிர்­பார்க்­கின்றோம்.   ஐக்கிய தேசிய கட்­சியால் ஒரு­போதும்  சிறந்த எதிர்க்­கட்­சி­யாக  செயற்­பட முடி­யாது. எதிர்க்­கட்சி  தலைவர் விவ­கா­ரத்­திலும் கட்­சிக்குள் இரு வேறு­பட்ட கருத்­துக்கள் இன்றும்  நில­வு­கின்­றன. இந்­நி­லை­மையே  இடம்பெற்று முடிந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் காணப்­பட்­டன.


கடந்த அர­சாங்­கத்தில்  தேசிய பிரச்­சினை மற்றும்  பொரு­ளா­தார முன்­னேற்றம் குறித்து  எவ்­வித கவ­னமும் செலுத்­த­வில்லை. மாறாக ஐக்­கிய தேசிய கட்­சியின் உள்­ளக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு   காண்­ப­தற்கே முக்­கி­யத்­துவம்   அளிக்­கப்­பட்­டன. இதன் விளைவு  அனைத்து துறை­க­ளிலும் தாக்கம் செலுத்­தி­யது.     ஜனா­தி­பதித் தேர்­தலில்    நாட்டு மக்கள்  அர­சியல் ரீதியில் சரி­யான தீர்­மா­னத்தை எடுத்­தார்கள். அதுவே பொதுத்­தேர்­தலிலும்  கிடைக்கப் பெறும்.


சுற்­றுச்­சூழல் பாது­காப்பு மற்றும் வன­வ­ளத்­துறை  தொடர்பில் அர­சாங்கம்  அதி­க­ள­வான   கவனம் செலுத்­தி­யுள்­ளது.    25 மாவட்­டங்­க­ளையும் உள்­ள­டக்­கிய  விதத்தில்  புதிய  செயற்­றிட்டம்  எதிர்­வரும் மாதம் தொடக்கம் சூழல்சார்  விட­யங்­களை உள்­ள­டக்கி முன்­னெ­டுக்­கப்­படும். வன­மூ­டு­கையின்  பரப்­பினை  அதி­க­ரிப்­பதே   பிர­தான நோக்­க­மாக   காணப்­ப­டு­கின்­றன.


பல்­வேறு  கார­ணி­க­ளுக்­காக   அழி­வ­டைந்­துள்ள   பாது­காக்­கப்­பட வேண்டும் என்று அடையாளப்படுத்தப்பட்ட    வனங்களின் பௌதீக வளத்தை  மெருகூட்ட  நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். அரச மற் றும் தேசிய  நிகழ்வுகளில் தேவையற்ற   செலவு களைக்  குறைத்து   மரநடுகையினை ஊக் கப்படுத்துவதற்கான    திட்டங்கள்  பின்பற் றப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36