(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் பலமான எதிர்க்கட்சி ஒன்றையே எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி யால் ஒருபோதும் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது. கட்சிக்குள் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு மாத்திரமே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து நாட்டை கடந்த ஐந்து வருட காலமாக பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்கள் என வனவளத்துறை மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் முறையாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 8ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது அமர்வினைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். 3ஆம் திகதி முதலாவது கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு காணப்படுகின்றது. அந்தவகையில் பலமான எதிர்க்கட்சியை எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியால் ஒருபோதும் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது. எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்திலும் கட்சிக்குள் இரு வேறுபட்ட கருத்துக்கள் இன்றும் நிலவுகின்றன. இந்நிலைமையே இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் காணப்பட்டன.
கடந்த அரசாங்கத்தில் தேசிய பிரச்சினை மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மாறாக ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. இதன் விளைவு அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்தியது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் சரியான தீர்மானத்தை எடுத்தார்கள். அதுவே பொதுத்தேர்தலிலும் கிடைக்கப் பெறும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவளத்துறை தொடர்பில் அரசாங்கம் அதிகளவான கவனம் செலுத்தியுள்ளது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய விதத்தில் புதிய செயற்றிட்டம் எதிர்வரும் மாதம் தொடக்கம் சூழல்சார் விடயங்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். வனமூடுகையின் பரப்பினை அதிகரிப்பதே பிரதான நோக்கமாக காணப்படுகின்றன.
பல்வேறு காரணிகளுக்காக அழிவடைந்துள்ள பாதுகாக்கப்பட வேண்டும் என்று அடையாளப்படுத்தப்பட்ட வனங்களின் பௌதீக வளத்தை மெருகூட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். அரச மற் றும் தேசிய நிகழ்வுகளில் தேவையற்ற செலவு களைக் குறைத்து மரநடுகையினை ஊக் கப்படுத்துவதற்கான திட்டங்கள் பின்பற் றப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM