(அட்டன் நிருபர்)
வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். பௌதீக விஞ்ஞான பிரிவில் அட்டன்–டிக்கோயா பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட, ராம் பிரசாத் என்ற மாணவன் 3ஏ பெறுபேற்றை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.
மேலும், உயிரியல் விஞ்ஞான பிரிவில் அட்டன் நகர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட, ஸ்ரீ மதுஷான் என்ற மாணவன் 3ஏ பெறுபேற்றை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளார்.
அத்தோடு, அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தலவாக்கலை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட, ஆர்.கபிஷா என்ற மாணவி 3ஏ பெறுபேற்றை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.
மேலும், தொழில்நுட்ப பிரிவில் வட்டவளை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட, எம்.மெரினா என்ற மாணவி 3ஏ பெறுபேற்றை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.
இம்முறை இந்த கல்லூரியிலிருந்து 130 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும் என கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM