சுடுநீர் கொட்டியதில் எரிகாயங்களுக்குள்ளான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

29 Dec, 2019 | 11:24 AM
image

மேசையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சுடுநீர் பாத்திரத்தை தவறுதலாக தட்டியதில் உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளான ஆண்குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லினக்கபுரம் கீரிமலை பகுதியைச் சேர்ந்த கஜீபன் சகாஸ் என்ற ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழந்தைக்கு பால் கரைப்பதற்கு சுடுநீரை தயாரித்த தாய் அப்பாத்திரத்தை மேசையின் விளிம்பில் வைத்து விட்டு பால்மா பெட்டியை எடுக்க அறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தை மேசை விரிப்பு சீலையை இழுத்துள்ளது இதனால் விளிம்பில் வைக்கப்பட்ட சுடுநீர் பாத்திரம் குழந்தை மீது ஊற்றுண்டுள்ளது.

உடனடியாக குழந்தையை எடுத்துச் சென்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனினும் வெள்ளிக்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலகர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00