சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் இன்று காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக அதிகரித்துள்ளதாக 'Sky News' சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதல் காரணாக மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிரிக்கக்கூடும் எனவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக பொது மக்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே அதிகாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மொகதீஷுவில் உள்ள வாகன சோதனைச் சாவடியொன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதுவரை எந்தவொரு அமைப்பும் மேற்கண்ட தாக்குதலுக்கு பொறுப் பேற்க்காத நிலையில் அல் ஷாபாப் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1991 இல் இருந்து சோமாலியா நாடு வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. அல்-கொய்தாவுடன் இணைந்த அல்ஷபாப் தீவிரவாதம் இயக்கம் நடத்திய கார் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் தலைநகர் தொடர்ந்து சீர்குலைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM