யாழ். மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடென்றினுள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கும்பல் வந்து செல்வதாகவும், அவர்கள் போதைப்பொருள் பாவணை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டமையால் அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்த கட்டடத்தை இடித்தழித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பலே இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றனது.
குறித்த வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்லும் போது , அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளரான இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி , கேற் என்பவற்றையும் சேதமாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை அன்றைய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழில் ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் இயங்குவதாகவும் அவர்களை புதுவருடத்திற்கு முன்னர் அடக்குவோம் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்த நிலையில் , இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM