பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் வயல், போக்குரவத்து பாதிப்பு

Published By: Digital Desk 4

23 Dec, 2019 | 11:38 AM
image

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்தமையினால் நேற்று பிற்பகல் பொத்தானை அணைக்கட்டு இருபத்தைந்து அடியில் உடைப்பெடுத்தமையினால் பொத்தானை பிரதேசத்திலுள்ள சுமார் ஐயாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்று முழுதாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் தற்போது வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரின்  ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக பொத்தானை கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய நடவடிக்கைக்காக பொத்தானை பகுதிக்கு சென்று திரும்பி வரமுடியாமல் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை முப்படையினரின் உதவியுடன் படகுகள் மூலம் கொண்டுவரும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.  

அத்தோடு புணாணை அணைக்கட்டின் பத்து வான் கதவுகள் 12 அடிக்கு திறக்கப்பட்டு காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கிராமங்களுக்கு வெள்ள நீர் செல்லும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின்...

2025-02-06 17:23:17