இலங்கை பாடசாலை மாணவர்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான மைலோ வர்ண விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பாடசாலை வீர வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்ண விருதுகள் தற்போது 24ஆவது தடவையாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் இந்த மாதம் 10ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிமுதல் நடைபெறவுள்ளது.
26 விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 352 வீரவீராங்கனைகளுக்கான விருதுகள் இதில் வழங்கப்படவுள்ளன. அது தவிர சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை வர்ண விருதுகளுக்கு தொடர்ந்தும் 24ஆவது வருடமாக மைலோ நெஸ்ட்லே நிறுவனம் அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM