தேசிய நல்லிணக்கத்தினை மேலும் வளர்த்துக் கொள்வதோடு இந்தியாவின் புரிந்துணர்வோடும் மாத்திரமே தமிழ் மக்களுடைய நிலையான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சர்வதேசம் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரவும் இல்லை பெற்றுத் தரப்போவதும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ,
சர்வதேசத்தின் ஊடாக மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று நீண்ட காலமாக சில தமிழ் கட்சிகள் கூறிவருகின்றமை தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய வாய்ப்பை தமிழ் தரப்புக்கள் தவற விட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை மக்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM