மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளே உள்ளன. எனவே, மஹிந்த ராஜபக் ஷவிற்கோ அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் பிரிதிநிதிகள் அண்மையில் திருகோணமலை முகாமிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனை விட ஒரு பெரிய அவமானம் நாட்டிற்கு இல்லை . மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் அச்சுறுத்தல்களையும் மேற்குலகத்தின் அழுத்தங்களையும் தாண்டி புலிகளை அழித்தோம். அந்த புலிகளுக்கு சிங்கத்தை வேட்டையாட சந்தர்ப்பம் அழிப்பதாகவே பாதுகாப்பு குறைப்பு காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றது. ஏனைய தலைவர்களை போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட முடியாது . ஆசிய வலயத்தை எடுத்துக் கொண்டாலும் மஹிந்த ராஜபக்ஷ முக்கியமான தலைவர் . சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்பட்டும் பாதுகாப்பை குறைத்தமையானது மிகவும் மோசமான நிலையாகும் . ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக போர் தொடுக்கப்பட்ட போது இந்தியா கடுமையாக அச்சுறுத்தியது. வானில் பருப்பு போன்றவற்றை போட்டு இலங்கையின் இறையான்மையை மீறியது. அது போதாது என்று இராணுவத்தை அனுப்புவதற்கு முன்னர் போரை நிறுத்துமாறு கூறி இந்தியா அச்சுறுத்தியது. இதனையடுத்து விடுதலை புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்பட்டது.
இவ்வாறு இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச தலையீடுகள் காணப்பட்டது. ஆனால் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே விடுதலை புலிகளை அழித்தார். அதற்காக இன்று அவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து விட சர்வதேச சதி செய்தது. தற்போது அவரது பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு மிகவும் இழிவான செயலாகவே கருதுகின்றோம். நாட்டிற்காக பல தியாகங்களை செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு புலி ஆதரவாளர்கள் லண்டன் விமான நிலையத்தை விட்டு வௌியே செல்ல அனுமதிக்க வில்லை .அவ்வாறான செயல்களை மக்கள் மறந்து விட வில்லை எனவே மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து இழிவான அரசியலை செய்ய வேண்டாம் என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM