(எம்.மனோசித்ரா)
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட போது , பாராளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்படுவாராக இருந்தால் அதற்காக வழமையான பின்றப்படும் நடவடிக்கை எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான அறிவித்தல் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளே தனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருக்கிறார்.
இவ்விடயம் தொடர்பில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் கே. டபிள்யூ.ஈ.கரலியத்தவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார்.
அந்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கடித்தின் பிரதிகள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும், பதில் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட போது வழமையாக பின்பற்றப்படுகின்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று நான் நம்புவதோடு, இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் இந்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM