பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைதானது கவலையளிப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த கைதானது பாராளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய பராம்பரியங்களையும், சிறப்புரிமைகளையும் மீறியுள்ளதாகவும் சபாநாயகர் கருஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்வதற்கு முன்பதாக அதுகுறித்து சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் சம்பிக்க ரணவக்கவின் இல்லத்திற்குள் நுழைந்த பின்னரே பிரதி சபாநாயகருக்கு இவ்விடயம் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் சாபாநயாகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் முதன்மையானவர் என்ற ரீதியில் சபாநாயகர் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை பாதுகாப்பவராவார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவாராக இருந்தால் அதற்காக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனை கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி 232/12 மற்றும் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 234/6 ஹன்சாட்டில் அறிக்கையிடப்பட்டிருக்கிறது.
தற்போதைய சபாநாயகர் கருஜய சூரியவினால் இந்த சம்பிரதாயம் இன்றும் பலப்படுத்தப்பட்டு முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவர் சபாநாயகராக பதவி வகித்த காலம் முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்கும் வழக்கமே பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM