கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அதிபர் சேவை தரம் - 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் உரையாடிய கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
குறித்த ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (18.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சிற்கு வருகை தந்து தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அமைச்சரிடம் முறையிட்டனர்.
இதன்போது, நாடளாவிய ரீதியில் சுமார் 610 தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் மொழிவாரியாக ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்ற ஆட்சேர்ப்பு நியமங்களுக்கு மாறாக ஆட்சேர்ப்பு இடம்பெற்றமையினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆட்சியில் இருந்தவர்களிடமும் கடந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களிடமும் இதுதொடர்பாக முறையிட தாங்கள் முயற்சித்தபோதும் தங்களுடைய கோரிக்கையை அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தினையும் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தினர்.
உடனடியாக, கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.
குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக கல்வி அமைச்சரினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உறுதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அவதானம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்ளுக்கான நியாயத்தை பெற்றுத் தருவதாக அமைச்சரால் அதிபர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM