(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் காணி உறுதிப்பத்திரத்துடன் இலவசமாக காணி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என காணி இராஜாங்க அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இடைக்கால அரசாங்கம் தற் போது முறையான கொள்கைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகத்தினை முன்னெடுத்து செல்கின்றது. காணி தொடர்பில் தற்போது எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு துரிதகரமான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
தலைநகர் கொழும்பில் அரச காணிகள் சுவீகரிக்கப்பட்டு அதில் குடியிருப்புக்களை அமைத்துள்ள பொதுமக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முறையான வசதிகளுடன் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும்படி உரிய அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட இராணுவத்தினருக்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்படும். இராணுவத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இலவச காணி வழங்கப்படும்.
ஊடகவியலாளர்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது. மாறாக வழங்கப்படும் சேவைக்கு முக்கியத்துவம் செலுத்தப்படும். ஊடகவியலாளர்கள் எப்பிரதேசத்தில் தமக்கான காணி தேவை என்பதை தெரிவு செய்து கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM