யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வளாகத்துக்குள் பஸ் மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவத்தையடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்து ஏற்பட்ட பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருத்து பருத்தித்துறைக்கு புறப்பட்ட பஸ் வளாகத்துக்குள் இருக்கும் அலுவலகத்துக்கு முன்பாக பயணித்த போது முதியவர் ஒருவரை மோதியது. சம்பவத்தையடுத்து முதியவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பஸ்ஸை சாரதி வேகமாகச் செலுத்தி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அங்கு மக்கள் கூடியதால் குழப்பநிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM