2020 இல் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம் - ரணில் 

Published By: R. Kalaichelvan

17 Dec, 2019 | 07:42 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாம் ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கமுடியாது. எமது குறைபாடுகள் என்னவென்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு அடுத்தகட்டம் நோக்கிப் பயணிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரவித்தார்.

அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அச்சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பல்கலைக்கழகங்களில் உள்ள எமது நாட்டின் இளைய தலைவர்களைச் சந்திப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் எம்மால் ஒரே இடத்தில் தேங்கிநிற்க முடியாது. 

அந்தவகையில் தற்போது பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் எம்மை வந்து சந்திப்பதுடன், அவர்களுடைய ஆலோசனைகளையும் முன்வைத்து வருகின்றனர். அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம்.

நாம் எமது குறைபாடுகள் என்னவென்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். நான் எப்போதும் இப்பதவியில் தொடர்ந்து இருக்கமாட்டேன்.

எனவே தற்போது புதிய தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. அதேபோன்று ஒருவருக்கொருவர் முரண்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பொருத்தமான எதிர்காலத்திட்டத்தை வகுக்குமாறும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43