(எம்.மனோசித்ரா)
கண்டியிலிருந்து கொழும்பு ஊடாக களனி பாலத்துக்கு உட்புகும் இரு வழிபாதையில் ஒரு பாதையின் நிர்மாணப் பணிகளின் பொருட்டு இன்று காலை 6 மணிமுதல் தற்காலிகமாக இவ்வீதி மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய தினம் இப்பாதையில் பயணிக்கும் வாகனங்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையினை இத்திட்டத்தின் முன்னோடி பரீட்சார்த்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக இன்று ஒரு வழிகாட்டி பாதையில் இலங்கை பொலிஸார் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
இத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் நாளை மறுதினம் வியாழக்கிழமை (19) முதல் சனிக்கிழமை (21) வரையில் நிர்மாணப் பணிகளுக்காக இப்பாதையில் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு வழி பாதைக்கு மட்டுப்படுத்தப்படும்.
இவ்வீதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இலகு வாகனங்கள் மற்றும் பேரூந்துகள் கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையின் பெலிகொட இடமாறலை மாற்று பாதையாக உபயோகிக்க முடியும்.
மேலும் பாரஊர்திகள் மற்றும் கனரக வாகனங்கள் கொழும்பு - நீர்கொழும்பு (ஏ03) வீதியை மாற்றுவழி பாதையாக உபயோகிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM