அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 மணி நேரத்தில் 123 டுவிட்டர் பதிவுகளை இட்டு சாதனைபடைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரை அதிகம் பயன்படுத்தும் உலக தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கியமானவர்.
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், அரசின் புதிய திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் முக்கிய முடிவுகளை டுவிட்டரில்தான் வெளியிடுவார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 2 மணி நேரத்தில் 123 பதிவுகளை வெளியிட்டு டிரம்ப், டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார்.
தன்னை பதவியை விட்டு நீக்குவதற்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் டிரம்ப் இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
ஒரு பதிவில் அவர், தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்று ஜனநாயக கட்சியினரை சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM