இரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி ?

16 Dec, 2019 | 11:54 AM
image

2015ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி அதி­காலை, ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் வெளி­யாகிக் கொண்­டி­ருந்த போது, வெற்­றி­முகம் காட்டிக் கொண்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை விட, அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவின் மீதே எல்­லோரது கவ­னமும், குவிந்­தி­ருந்­தது.


அதி­காலைப் பொழுதில் தேர்தல் தோல்­வியை ஒப்­புக்­கொண்டு மஹிந்த ராஜபக் ஷ அலரி மாளி­கையை விட்டு வெளி­யே­றினார். பின்னர்  அவர் ஹெலி­கொப்­டரில் தங்­கா­லையில் உள்ள கால்டன் இல்­லத்­துக்குச் சென்றார்.


அவர் தோல்­வியை ஒப்­புக்­கொண்டு, அலரி மாளி­கையை விட்டு வெளி­யேறி, தங்­கா­லைக்குச் சென்று ஓய்­வெ­டுத்துக் கொண்­டி­ருந்த போதும், அவரைப் பற்­றிய செய்­திகள் தொடர்ந்து வந்து கொண்­டி­ருந்­தன. ஊட­கங்­களின்  கவனம், அவர் மீதே குவிந்­தி­ருந்­தது.


ஆனால், 2019 நவம்பர் 16 ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், ஜனா­தி­ப­தி­யாக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன எப்­படி வெளி­யே­றினார் என்­பது பற்­றியோ அவ­ரது எதிர்­காலம் பற்­றியோ யாரும் கண்­டு­கொள்­ள­வே­யில்லை.


மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­னதில் இருந்து ஓரி­ரண்டு ஆண்­டுகள் கொண்­டா­டப்­ப­டு­கின்ற ஒரு தலை­வ­ராக- மக்­களின் தலை­வ­ரா­கவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டார். ஊட­கங்­களும் அவரை மெச்சிக் கொண்­டி­ருந்­தன. ஆனால் அவர் விலகிச் சென்­ற­போது யாரும் வருந்தம் கொள்­ள­வில்லை.
மஹிந்த ராஜபக் ஷ தோற்­க­டிக்க முடி­யாத ஒரு சக்­தி­யாக கரு­தப்­பட்­டவர். அவ­ரது தோல்வி எதிர்­பார்க்­கப்­ப­டாத ஒன்­றாக இருந்­ததால், தோல்­வி­ய­டைந்த பின்­னரும், அவரைப் பற்­றிய செய்­தி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் இருந்­தது.


மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­பார்க்­கப்­ப­டாத வெற்­றி­யினால் மட்டும் மின்­னி­யவர். அதி­காரம் அவரை விட்டுப் போன பின்னர், அவர் யாராலும் கண்­டு­கொள்­ளப்­ப­டாத ஒரு­வ­ராக மாறி விட்டார்.
தொடர்ந்தும் அதி­கா­ரத்தை தக்­க­வைக்க முயன்ற அவர், அது நடக்­காது என்று தெரிந்த பின்னர், இரண்­டா­வது முறையும் போட்­டி­யி­டு­வதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
ஆட்­சியின் இறு­திக்­கட்­டத்­தி­லேயே அவர், தான் அர­சி­யலில் இருந்து  ஓய்­வு­பெறப் போவ­தில்லை என்றும் கூறி­யி­ருந்தார்.


அதை­ய­டுத்து, அவர் தேசியப் பட்­டியல் மூலம்  பாரா­ளு­மன்­றத்­துக்குள் நுழைய முயற்­சிக்­கிறார் என்­றெல்லாம் செய்­திகள் வெளி­யா­கின. அவர் தேசியப் பட்­டியல் மூலம்  பாரா­ளு­மன்­றத்­துக்கு நுழை­வ­தற்கு யாரும் இடம் விட்டுக் கொடுக்கத் தயா­ராக இருக்­க­வில்லை.


அவ்­வாறு விட்டுக் கொடுத்­தாலும், 2015இல் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கொடுத்த தேசியப் பட்­டியல் வேட்­பா­ளர்­களின் பட்­டி­யலில் அவ­ரது பெயர் இல்­லாத போது, அவரால்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக முடி­யுமா என்ற கேள்­வி­களும் இருந்­தன.


இவ்­வா­றான நிலையில் அண்­மையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தான் மீண்டும் எழுவேன் என்றும் அர­சி­ய­லுக்குத் திரும்­புவேன் என்றும் அறி­வித்­தி­ருக்­கிறார்.  அவ­ரது அந்த அறி­விப்பு ஊட­கங்­க­ளிலோ மக்கள் மத்­தி­யிலோ பெரிய பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­த­வில்லை.


அடுத்த ஆண்டு நடக்­கப்­போகும்  பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொலன்­ந­றுவை மாவட்­டத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யி­டுவார் என்று, சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­யலர் தயா­சிறி ஜய­சே­கர கூறி­யி­ருக்­கிறார்.


மஹிந்த ராஜபக் ஷ தோல்­வி­ய­டைந்த போது அவ­ருக்குப் பின்னால், அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும், அவரைக் கொண்­டாடும் மக்­களும் அணி­தி­ரண்­டனர். அவரை மீண்டும் அரி­ய­ணையில் ஏற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்­டனர்.


ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சேன  பத­வியை விட்டு நீங்­கிய போது, யாருமே அதற்­காக கவ­லைப்­ப­ட­வில்லை. அவ­ருக்­காக ஏங்­கு­வ­தற்கு யாரும் இருக்­க­வில்லை. அவ­ரது கட்­சி­யினர் கூட இப்­போது அவரைக் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.


அர­சி­யலில் இரண்­டா­வது இன்னிங்ஸ் என்­பது எல்­லோ­ருக்கும் வாய்த்து விடாத ஒன்று. மஹிந்த ராஜபக் ஷ தோல்­வியைச் சந்­தித்து விட்டு மீண்டும் செயற்­பாட்டு அர­சி­ய­லுக்குள் வர முயன்ற போதும் பலர் அவரை எள்ளி நகை­யா­டினர். மீண்டும் மீண்டும் அவ­மா­னப்­படப் போகிறார் என்றே கூறினர்.
ஆனால், அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இரண்­டா­வது இன்னிங்ஸ் இன்னும் அமோ­க­மா­ன­தா­கவே ஆரம்­பித்­தி­ருக்­கி­றது, அது­போல, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், இரண்­டா­வது இன்­னிங்ஸை வெற்­றி­க­ர­மாக ஆடுவார் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை.


விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த தகை­மையே, மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மு­றை­களின் அர­சியல் செழிப்­புக்குப் போது­மா­னது,

ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ்­வாறு எதனைச் சாதித்து விட்டு அர­சி­யலில் மீள் பிர­வே­சத்­துக்குத் தயா­ரா­கிறார் என்ற கேள்வி இருக்­கி­றது.
அவர் ஆட்­சிக்கு வரும்­போது பல வாக்­கு­று­தி­களைக் கொடுத்­தி­ருந்தார். அந்த வாக்­கு­று­தி­களில் பெரும்­பா­லா­ன­வற்றை நிறை­வேற்­றாமல் அல்­லது, அந்த வாக்­கு­று­தி­க­ளுக்கு பாத­க­மான சூழ்­நி­லை­களை ஏற்­ப­டுத்தி விட்டே வெளி­யே­றினார்.


இப்­போது கூட கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு  பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்றுக் கொடுப்­பது குறித்து பேசி­யி­ருக்­கிறார்.
அந்த மூன்றில் இரண்டு பெரும்­பான்மை, 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஒழித்து விடும்  என்று தெரிந்­தி­ருந்தும், மைத்­தி­ரி­பால சிறி­சேன  இவ்­வா­றான அழைப்பை விடுத்­தி­ருக்­கிறார்.
2018 ஒக்­டோபர் ஆட்­சிக்­க­விழ்ப்பின் மூலம் அவர் கிட்­டத்­தட்ட எல்லா நிலை­மை­க­ளையும் குழப்பி விட்டே சென்­றி­ருக்­கிறார். அதற்குப் பின்னர் அவர் அர­சி­ய­லிலோ, ஆட்­சி­யிலோ எதையும் சாதிக்கக் கூடி­ய­வ­ரா­கவும் இருக்­க­வில்லை.


2015இல் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யி­ருந்தால், மக்­களின் ஆணைக்கு உரிய மதிப்பைப் கொடுத்து, செயற்­பட்­டி­ருந்தால், இன்று அவ­ருக்கு ஏற்­பட்ட நிலையும் ஏற்­பட்­டி­ருக்­காது. அவரை தலையில் வைத்து மக்கள் கொண்­டாடும் நிலையே இருந்­தி­ருக்கும்.
அவரை பத­வியை விட்டுப் போகக் கூடாது என்று அழு­தி­ருப்­பார்கள். அவ­ரது மீள் வரு­கைக்­காக ஏங்­கி­யி­ருப்­பார்கள்.


இப்­போதும் கூட, மைத்­தி­ரி­பால சிறி­சேன மீள் அர­சியல் பிர­வேசம் செய்­வது சுல­ப­மா­ன­தாக இருக்கப் போவ­தில்லை. ஏனென்றால் அவ­ரது தலை­மை­யி­லான  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி நினைத்­த­வாறு தலை­யெ­டுக்க முடி­யாது.


பொது­ஜன பெர­மு­னவின் மொட்டு சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட வேண்டும் என்ற அழுங்குப் பிடியில் அந்தக் கட்­சி­யினர் தீவிரம் காட்­டு­கி­றார்கள். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் கொடுத்த வாக்­கு­று­தியை அவர்கள் இனி காப்­பாற்­று­வார்­களா என்­பது தெரி­யாது.


நாற்­காலி சின்­னத்தில் போட்­டி­யி­டு­வதை பொது­ஜன பெர­மு­ன­வினர் விரும்­ப­வில்லை. அதி­காரம் அவர்­களின் கையில் இருக்கும் போது அவர்கள் வைத்­தது தான் சட்டம். மைத்­தி­ரியின் கையில் அதி­காரம் இருந்த போது, அவர் நாற்­காலி தான் சின்னம் என்று அடம்­பி­டித்து இணங்க வைத்தார்.


ஆனால் இப்­போது. அதி­காரம் ராஜபக் ஷவி­ன­ரிடம் இருக்­கி­றது. அவர்கள் சொல்­வது தான் சட்டம்.
அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கும் சொல்­லுக்கும் கீழ்ப்­ப­டியும் ஒரு­வ­ரா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன இரண்­டா­வது இன்னிங்ஸ் அர­சி­யலை தொடரப் போகி­றாரா என்ற கேள்வி இருக்­கி­றது.


மைத்­தி­ரி­பால சிறி­சேன  பாரா­ளு­மன்­றத்­துக்கு மீண்டும் நுழை­வதன் மூலம், அமைச்சர் பத­வியைப் பெறலாம். அது ராஜபக் ஷவி­னரின் அர­சியல் அதி­கா­ரங்­க­ளுக்­குட்­பட்ட ஒரு பத­வி­யாகத் தான் இருக்கும். அவ்­வா­றான ஒரு அர­சி­யலைத் தான் தொட­ரு­வ­தற்குத் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கி­றாரா ? என்ற கேள்வி எழு­கி­றது.


மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு­போதும் ஆளுமை அரசியலை வெளிப்படுத்தியவரல்ல. அவர் உச்ச அதிகாரத்தில் இருந்த போதும். அதனைக் குழப்பியடித்து கோமாளித்தனம் பண்ணியவர்.
எப்போதும், அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து பழக்கப்பட்டவர். அவரால், ராஜபக் ஷவினரின் அரசில் ஒரு அமைச்சராக இருப்பதில் சங்கடம் இருக்காது.
ஆனால் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர், பாராளுமன்ற அரசியலுக்கு மீண்டும் வந்து, அலைக்கழிவது அழகான விடயமல்ல.


மஹிந்த ராஜபக் ஷவும் இதே விமர்சனங்களைத் தான் எதிர்கொண்டார். ஆனால் அவர், தனக்கிருந்த ஒரு ஆளுமை மற்றும் ஆதரவு வட்டத்தினால், அந்த விமர்சனங்களை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
அவரைப் போல மைத்திரிபால சிறிசேனவினால் எழுச்சி பெற்று விட முடியாது, ஏனென்றால், எல்லோரும் மஹிந்த ராஜபக் ஷ அல்ல, அவ்வாறு ஆகி விடவும்  முடியாது.


- சத்ரியன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right